ஆந்திர பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் கல்வி உரிமைக்காக புரட்சிகர வழியில் செயல்பட்டுவரும் முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) தங்களது 21வது மாநில மாநாடு (25,26,27) மூன்று நாள் தேசிய கருத்தரங்கு எலுரு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர்கள்,சமுக செயற்பாட்டாளர்கள்,பாஞ்சாப், கர்நாடக, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநில மாநிலத்தில் செயல்படும் மாணவர் அமைப்பின் பிரிதிநிதிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று (25-11-2022) மாணவர்கள் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (26/11/2022) எலுரு திருமண மண்டபத்தில் காலை 10:00 மணியளவில் கொடி ஏற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த மாநில கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்த மாநில மாநாட்டில்
தோழர். ச. அன்பு,
மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
அவர்கள் உரையாற்ற உள்ளார்.
தகவல்:
ஊடக பிரிவு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தமிழ்நாடு.
95007 92976