பாஜகவின் முன்னாள் அமைச்சரும் இந்நாளைய நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராகூர் (ஜூலை 30 அன்று) பாராளுமன்றத்தில் பேசும் பொழுது “தன் சொந்த சாதி என்னவென்று தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்று ராகுல் காந்தி மீது சாதி வன்மத்தை கக்கியுள்ளார்.

மக்களில் சிலர் தெருக்களில் சண்டை போடும் பொழுது “விருந்தாளிக்கு பொறந்த பயலே, நீ எல்லாம் கேள்வி கேக்குறியா?…. அப்பன் பேரு தெரியாதவனே, நீ எல்லாம் பேச வந்துட்டியா?…..” என்றெல்லாம் வன்மத்துடன் பேசுவதற்கும் இந்த சாதி வெறியன் அனுராக் சிங் தாக்கூர் பேசுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

நாடாளுமன்றம் புனிதமான இடம். அங்கு கண்ணியமாக பேச வேண்டும் என்று பாடம் எடுக்கும் அறிவு ஜீவிகள் யாரும் இப்பொழுது இதுகுறித்து வாய் திறக்கவில்லை.

ஆனால் விஸ்வகுருவும் கடவுளின் குழந்தையுமான மோடி, அனுராக் சிங் தாக்கூரின் இந்த சாதி வெறி பேச்சு காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “என் இளம் மற்றும் ஆற்றல் மிக்க நண்பரான அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும்” என்றும் “அற்புதமான முறையில் நையாண்டி மற்றும் உண்மையை கலந்து, இண்டி கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியுள்ளார்” என்றும் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அனுராக் சிங் தாக்கூரின் அருவருக்கத்தக்க பேச்சை தரம் கெட்ட மனிதனால் தான் ரசிக்க முடியும்; ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட, மனித மாண்பை மதிக்கிற எவராலும் இதை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

படிக்க: ராகுல் காந்தி எம்.பி பதிவு பறிப்பு சென்னை பாஜக அலுவலகம் மக்கள் அதிகாரம் முற்றுகை!

இன்றளவும் கூட தமிழகத்தில் நீங்கள் என்ன சாதி? என்று கேட்கும் வழக்கம் கிடையாது. அப்படி சாதியை தெரிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு நபரும் நீங்க எந்த ஊரு? எந்த தெரு? உங்க குலதெய்வம் என்ன? நீங்க என்ன ஆளுங்க? நீங்க என்ன வகுப்பு?என்றுதான் கேட்கிறார்கள்.

தமிழகத்தில், சாதிய சிந்தனையில் உள்ள மக்கள் கூட, தான் சாதிய சிந்தனையில் உள்ளவன் என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதற்கு விரும்புவதில்லை. அது தனது மதிப்பை குறைத்து விடும் என்று நினைப்பதுதான் அதற்குக் காரணம்.

இந்த நிலையை மாற்ற வேண்டும்; மீண்டும் சாதிய சிந்தனையை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக சங்கிகள் தமிழகத்தில் பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மக்களில் சிலரும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.

தமிழகத்தின் சராசரி மக்களுக்கு உள்ள பண்பையும் சாதி கொழுப்பெடுத்த அனுராக் தாகூரின் பேச்சை பொதுவெளியில் வெளியிட்டு அதை கண்டும் கேட்டும் ரசிக்கும் படி வலியுறுத்தும் மோடியின் அருவருக்கத் தக்க பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆர் எஸ் எஸ் – பிஜேபி பாசிஸ்டுகள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டத்தில், மக்கள் சாதி ரீதியாக பிளவுபடுத்தப்பட்டு எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப் படுவார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் புரியும்படி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

குமரன்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here