நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்நாளை தொடர் முழக்கப் போராட்டம்!
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) அறிவிப்பு
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு இந்தத் திசையில் முன்னோட்டி மாநிலமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகிறது. அதற்கும் முன்பிருந்தே கடுமையாக எதிர்த்தும், நீதிமன்றத்தில் போராடியும் வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளையொட்டி, இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் நடந்துவரும் போராட்டங்கள் “முற்றிலும் நீட் ரத்து” என்ற நோக்கத்தோடு செல்ல வேண்டும் என்று “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN)” கருதுகிறது.
பல மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பாகத் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வரும் “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு” (FSO-TN) இல் உள்ள அமைப்புகள் தனித்தனியாகவும், இணைந்தும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் “இந்தியா முழுவதும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம்” நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டங்களுக்கும் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீட் ஒழிப்புக்காகப் போராடும் மாணவர்கள் மீது அரசுகள் நடத்தும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம். அடுத்தடுத்த கட்டப் போராட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். எத்தனை அடக்குமுறை வந்தாலும், நீட் ஒழிக்கப்படும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர்கள்,
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN)








(FSO_TN )மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றி பெற மக்கள் அதிகாரம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.