ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியம் கனவை தகர்த்தெறிவோம்!
இரண்டாயிரம் ஆண்டுகளாக உழைக்கும் மக்களை சாதிரீதியாக பிளவுபடுத்தி தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் ஆரிய பார்ப்பன கும்பல் இன்று நாட்டை கைப்பற்றி அகண்ட பாரத தன்மையுடன் கூடிய இந்து ராஷ்டிராத்தை அமைக்க துடிக்கிறது.
பார்ப்பனிய எதிர்ப்பில் வரலாற்று ரீதியாக திராவிட கோட்டையாக விளங்கி வரும் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆட்சியை நிறுவிக் காட்டுகிறோம் என்று ஆர் எஸ் எஸ் சபதம் எடுத்துக் கொண்டு தொடர்ந்து வேலை செய்து வருகிறது.
திராவிட அரசியலில் எஞ்சி நிற்கும் திமுகவை முற்றாக ஒழித்துக் கட்டுவதன் மூலம் எதிர்ப்பு இல்லாத பார்ப்பன சாம்ராஜ்யத்தை தமிழகத்திலும் நிறுவ எத்தணிக்கிறது.
இந்தியாவின் தலைப்பகுதி காஷ்மீரை அடக்கி விட்டோம் என்ற மமதையில் கால் பகுதிக்கு வைத்தியம் பார்க்க போகிறோம் என்ற அமித்ஷா வின் கொக்கரிப்பை லேசாக கருத முடியாது.
உழைக்கும் மக்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் பொது எதிரியான ஆர்.எஸ்.எஸ்.கும்பலை புரிந்துக் கொண்டு முறியடிக்க இந்த சிறு வெளியீடு பெரும் ஆயுதமாக உதவும்.
விலை ரு.50
கீழைக்காற்று வெளியீட்டகம்
எண்.16 அருமலை சாவடி,
கண்டோன்மெண்ட்,
சென்னை.
அலைபேசி எண் – 8925648977
அப்படியே புத்தகத்தின் விலையையும் போட்டிருக்கலாமே….
ஆலோசனைக்கு நன்றி!