ன்று நாடு இரண்டு எதிர் சித்தாந்தங்களுக்கு இடையில் போராடிக் கொண்டுள்ளது.

நாட்டை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் தங்கு தடையற்ற வேட்டைக்காடாக மாற்றுவதற்கு பொருத்தமான மறுகாலனியாக்கத்தை உருவாக்குவதற்கு தீவிரமாக வேலை செய்து கொண்டுள்ளது ஆர்எஸ்எஸ் – பாஜக.

இந்த ஏகாதிபத்திய சேவைக்கு தேவையான அகண்ட சந்தையை ‘ஒரே நாடு என்ற முழக்கத்துடன் பாரத் என்ற பெயரில்’ உருவாக்குவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டி, விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் கூலி அடிமைகளை உருவாக்குவது போன்ற அனைத்தும் அவர்களின் சித்தாந்தத்தில் உள்ளது.

ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியம் என்பது பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தின் ஒரு நூற்றாண்டுக் கனவு. அந்த பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை அவர்கள் இந்து ராஷ்டிரம் என்றும், ராம ராஜ்ஜியம் என்றும் பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள்.

சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து, ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் நால்வர்ண கோட்பாடு அதனை அடிப்படையாகக் கொண்ட சனாதனம் ஒருபுறம் நாட்டு மக்களின் மீது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துக் கொண்டுள்ளது.

இந்த சனாதனத்தை அது துவங்கிய காலத்திலிருந்து எதிர்த்து போராடிவரும் மரபு. அதாவது சாருவாகர்கள் துவங்கி சித்தர்கள் முதல் வள்ளலார் வரையிலான பார்ப்பன எதிர்ப்பு மரபு. அதுவே இந்தியாவின் பொருள் முதல்வாத மரபாக உள்ளது.

ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை நிலை நாட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி துடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதனை எதிர்த்து மதச்சார்பற்ற, சமத்துவ அடிப்படையிலான இந்தியாவை உருவாக்குவதற்கு கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மகத்தான லட்சியத்தை அடைவதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், மாணவர்கள், பல்வேறு துறைகளில் உள்ள அறிவுஜீவிகள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து போராடுகிறார்கள்.

இந்த எதிரெதிர் சித்தாந்த போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக போராடுகின்ற அல்லது ஒன்றுபடுகின்ற மக்களை பிரித்தாளும் கொள்கையை, ஆர் எஸ் எஸ் பாஜக தலைவர்கள் அன்றாடம் வெவ்வேறு வகைகளில் அமல்படுத்தி வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு திறன் முதல் பழக்கவழக்கம், பாரம்பரியம் என்ற பெயரில் கடைபிடிக்கப்படும் பிற்போக்குத்தனமான நடைமுறைகள் வரை அனைத்தையும் கையாண்டு மக்களை தொடர்ந்து பிளவுபடுத்தி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக உண்மைக்கு புறம்பான பொய் செய்திகளை தொடர்ந்து பேசி வருகிறார்கள். அன்றாடம் அமித்ஷா மோடி முதல் அண்ணாமலை வரையிலான தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அண்ட புளுகுகளை புளுகி வருகிறார்கள். இவையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் இல்லை. நன்றாக தெரிந்தே திட்டமிட்டு புளுகுகிறார்கள். தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப் போவது வரை சொல்கின்ற பொய்கள் மற்றும் கட்டுக் கதைகளுக்கு பின்னால் நம்மை ஓட வைக்க திட்டமிட்டுள்ளனர்.

அவர்கள் கூறும் அண்ட புளுகுகளை நாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது, அவர்கள் வேறொரு புதிய புளுகை முன் வைப்பார்கள். ஆர் எஸ் எஸ் பாஜகவை எதிர்த்துப் போராடும் அறிவுத்துறையினர், சமூக வலைதளங்கள் அனைவரும் இதனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நாட்டை அவர்கள் விரும்பிய திசை வழியில் அதாவது அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை மறுகாலனியாக்கம் என்ற பெயரில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது ஆட்சியில் 155 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி நாட்டை மிகப்பெரும் கடன் வலையில் சிக்க வைத்துள்ளார் மோடி. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆக இந்தியா உருவெடுக்கும் என்று தொடர்ந்து அவர் கூறிக் கொண்டிருப்பதன் பின்னணி என்ன?

ஆர் எஸ் எஸ் பாஜகவின் எஜமானர்களான அதானி அம்பானி உள்ளிட்ட இந்தியாவின் தேசங்கடந்த தரகு முதலாளிகள், தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு அதாவது 100 முதலாளிகளின் சொத்து மதிப்பு 60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட இந்தியர்களின் வளர்ச்சிக்காக போடப்படும் திட்டங்கள் தான் நாட்டின் வளர்ச்சி பாதை என்றும், முன்னேற்றத்திற்கான வழி என்றும் ஆர்எஸ்எஸ் பாஜகவின் பொருளாதாரக் கொள்கை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே அறிவிக்கின்றது.

இந்தியா உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு வருவது அல்ல. முதலிடத்திற்கே வந்தாலும் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்களுக்கு கிடைக்கப் போவது என்ன? ஏகாதிபத்திய நிதி மூலதனங்களின் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைத்தனமான வாழ்க்கையும், சாதி தீண்டாமை கொடுமைகளும், அடக்கு முறைகளும் தானே. இதில் பெருமைப்படுவதற்கு நமக்கு ஒன்றும் இல்லை.

கோயபல்ஸை மிஞ்சும் மோடி!

மோடி முன்வைக்கும் பெருமிதத்தை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நமக்கு ஒரு சித்தாந்த கண்ணோட்டம் தேவைப்படுகிறது அந்த சித்தாந்தம் தான் பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியான மார்க்சிய சித்தாந்தமாகும் அந்த சித்தாந்தத்திற்கும் ஆர் எஸ் எஸ் மோடி முன்வைக்கின்ற பார்ப்பன இந்து மத வெறி பாசிச சித்தாந்தத்திற்கு இடையிலான போர்தான் நாம் நடைமுறையில் எதிர்கொண்டிருப்பது.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இதை புரிய வைப்பதில் தான் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றம், அதனை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பதை கொண்டு செல்வோம்.

அன்றாட பொய் செய்திகளை பரப்பும் அண்ணாமலை வகையறாக்களின் செய்திகளின் பின்னால் அலைபாய்ந்து காலத்தை விரயமடிக்காமல் செயல்படுவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here