சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் தீட்சிதர்களின் சட்டவிரோத, கிரிமினல் செயல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்து!

ஆர்ப்பாட்டம்

நாள் : 8.7.2023 சனி மாலை 4 மணி,
இடம்: காந்தி சிலை, சிதம்பரம்

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் பாட தடையை ஏற்படுத்துகிறது பதின்ம வயது சிறுமிகளுக்கு கட்டாய குழந்தை திருமணம் செய்து வைத்த குற்றவாளி கும்பல்.

இவர்களுக்கு ஆதரவாக சாமரம் வீசுகிறார் தமிழ்நாட்டின் அவமானமாய் திகழும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் ரவி. நானும் குழந்தை திருமணம் தான் செய்தேன் என்று தீட்சிதர் கும்பல் செய்த குற்றத்தை நியாயபடுத்துகிறார்.

அவாளுக்கு உதவிகள் செய்ய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இருக்கிறார் என்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் ரவுடித்தனம் செய்கிறது அக்கிரஹார கும்பல்.

“இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று மணிக்கொரு முறை கூவும் எச்.ராஜாவோ, அண்ணாமலையோ தீட்சிதர் கும்பல் ‘இந்துக்களுக்கு’ செய்யும் அநியாயங்களுக்கு நவ துவாரங்களை பொத்திக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆனால் நாம் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்துவோம்.

  • நந்தனாரின் வாரிசுகளே வாருங்கள்! தெற்கு வாயிலை திறப்போம்!
  • தில்லை கோயில் பொதுக்கோவில். அரசு கட்டுப்பாட்டில் எடுப்போம்!

தமிழர்களே!

  • நமது முப்பாட்டன் கட்டிய தில்லை கோயிலில் சிற்றம்பல மேடை ஏறி தமிழ் முழங்குவோம்!
  • பக்தர்கள் பணத்தை தீட்சிதர்கள் கொள்ளை அடிப்பதை தடுப்போம்! தில்லை கோவிலை பராமரிக்க உண்டியல் வைப்போம்!
  • அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவோம்!
  • தீட்சிதர்கள் அடித்தால் திருப்பி அடிப்போம்!
  • தயிர் சாதம் முண்டா தட்டுகிறது! கறிசோறு கை பூப்பறிக்குமா?
  • தீட்சிதர்களுக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி!
  • பக்தர்களுக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கட்சிகளும் களம் இறங்குவோம்!

மக்கள் அதிகாரம்
கடலூர் மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here