கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நகர இளைஞரணி பொறுப்பாளராக உள்ள ஹரிஷ் -ன் கார் கண்ணாடியை நேற்று நள்ளிரவு ‘மர்ம நபர்கள்’ உடைத்து விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் ஓடோடி வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கண்ணாடியை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்து முன்னணியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் தன்னுடன் ஹரிஹரன் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து கார் கண்ணாடியை உடைத்துள்ளது வெளியில் தெரிய வந்து அம்பலப்பட்டு நாறிப் போய் உள்ளது.

தன்னுடைய இந்து முன்னணியில் உள்ள ஷரிஸ் -ன் கார் கண்ணாடியை ஏன் தமிழ்ச்செல்வன் உடைத்தார்? விநாயகர் சதுர்த்திக்கு யார் சிலை வைப்பது? என்பதில் ஹரிசுக்கும் தமிழ்செல்வனுக்கும் இடையில் போட்டி இருந்துள்ளது. இந்த போட்டியில் ஹரிஷ் வென்று சிலையை வைத்துள்ளார்; ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமான தமிழ்ச்செல்வன் கார் கண்ணாடியை போட்டு உடைத்துள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்: பாஜகவினரின் கலவர முயற்சியை முறியடித்த மக்கள்!

இதைப் பார்க்கும் பொழுது சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

கார் கண்ணாடியை உடைப்பதன் மூலம் கலவரத்தை தூண்ட முயற்சி செய்தனரா ? இதை மறைப்பதற்காக சிலை வைப்பதில் ஏற்பட்ட ஆத்திரம் என்று திசை திருப்புகின்றனரா? அல்லது

சிலையை வைத்தால் வசூல் செய்து கல்லா கட்டலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமா? அல்லது

சிலை வைத்தால் இந்து முன்னணியில் பதவியை பெற்று கல்லா கட்டலாம் என்ற ஆசையில் மண் விழுந்ததால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமா?

இதை கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. தமிழக காவல்துறை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

இந்தப் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி தங்களின் கட்சியை வளர்க்க ஆசைப்பட்ட சங்கிகளின் வாயில் மண்ணள்ளி போட்டது போல ஆகிவிட்டது .

மக்கள் விழிப்புடன் இருந்து சங்கிகளின் மக்கள் விரோத செயல்களை முறியடிக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை.

நாம் முறியடிப்போம்!

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here