தீட்சிதர் சொத்தல்ல தில்லைக் கோவில்
மார்ச் 2, 2008 – மார்ச் 2, 2022.
தமிழகத்தில், தமிழன் கட்டிய கோவிலில் உள்ளே புகுந்து கொண்டு, “கரையான் புற்று எடுக்க கருநாகம் புகுந்தது போல்” சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ளே புகுந்து கோவிலை கைப்பற்றிக்கொண்டு, தனது சொந்த சொத்து போல அனுபவித்து வந்த தீட்சிதர் பார்ப்பனர் கூட்டத்திற்கு 2008-ஆம் ஆண்டு முடிவுகட்டி இருந்தோம். ஆனால் பல நூற்றாண்டு கால ஆதிக்கத்தை கைவிடுவதற்கு தீட்சிதர்கள் கூட்டம் தயாராக இல்லை.
படிக்க:
♦ தில்லை சமரில் தமிழ் வென்றது எப்படி? | நினைவுத் தொகுப்பு
♦ சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் போரில் முதல் வெற்றி!
தமிழக மக்களின் சுயமரியாதைக்கும், ஆன்மீக உணர்வுகளுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்குவதற்கும்,
தீட்சிதர்களின் மொழித் தீண்டாமை, சாதி தீண்டாமை கருவறை தீண்டாமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறோம்!
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை