தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
கண்டன அறிக்கை!!

04.10.2023

பத்திரிக்கைச் செய்தி


னநாயகத்தின் தாய் இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனப் பீற்றித் திரியும் பிரதமர் மோடி அவர்கள் ஜனநாயகத்தை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யும் கொலைக் குற்றவாளியாக அம்பலப்பட்டு வருகிறார்.

நேற்று காலை (3.10.23) டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு ஒன்பது பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 46 பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களின் மடிக்கணினி அலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அவற்றுக்கு எந்த விதமான ரசீதும் கொடுக்காமல் பறிமுதல் செய்துள்ளது. பிரபல சுயேச்சை ஆங்கில இணைய இதழான நியூஸ் க்ளிக் பத்திரிகையின் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா நியூஸ் க்ளிக் இன் மனித வள மேம்பாட்டுப் பொறுப்பாளர் அமித் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் கொடிய உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பிரபீர், அறிவியல் கண்ணோட்டமும் சமூக அக்கறையும் கொண்ட மிகச்சிறந்த பத்திரிகையாளர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்திலும் இதே போல அவர் அடக்குமுறைக்கு உள்ளாகி ஓராண்டு சிறையில் இருந்தவர். இவ்வளவு அடக்குமுறைகளையும் தாண்டி உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருப்பவர். 2021ல் இதேபோன்று நியூஸ்கிளிக் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் டெல்லி உயர்நீதிமன்றம் பிரபீரை அச்சுறுத்தி பொய் வழக்கில் போலீசார் கைது செய்யக் கூடாது என ஆணையிட்டது.

இந்த நிலையில் பிணையில் உடனே வெளிவந்து விடக் கூடாது என்ற தீய நோக்கத்தோடு உபா சட்டத்தின் கீழ் இப்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விவசாயிகள் போராட்டம் பற்றி டெல்லி ஷாகின்பாக் போராட்டம் பற்றி செய்தி எழுதியிருக்கிறீர்களா என்ற கேள்வியை எல்லோரிடத்திலும் கேட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் துணைவர்களின் உடமைகளையும் வங்கிக் கணக்குகளையும் சோதனை யிட்டு உள்ளனர். மிகப்பெரும் மனித உரிமை மீறல் குற்றத்தை நடத்தியிருக்கிறது  டெல்லி போலீஸ்.

உண்மையைப் பேசுவது, ‘நேர்மையான பத்திரிக்கையாளராக ஒடுக்கப்படும் மக்களின் குரலை ஒலிப்பது இப்போது கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது. இனி பத்திரிகையாளராக தொடர்வதா வேண்டாமா என்பது பற்றி யோசிக்கிறேன் ‘ என ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதுதான் மோடி எதிர்பார்ப்பது.

இதற்கு முன்னர் பிபிசி, தி வயர் டெய்னிக் பாஸ்கர் போன்ற சுயேச்சை ஊடகங்கள் மீது தொடர்ச்சியான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. ஆனாலும் மோடி ஆட்சியைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவதால் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரித்துக் கொல்ல முனைந்திருக்கிறது மோடி அரசு. நாடு எதிர்கொண்டிருக்கும் பேர பாயத்தின் நிச்சயமான அறிகுறி இது. ஆர்எஸ்எஸ் பாஜக மோடி கும்பலின் பாசிசத் தாக்குதலை முறியடிக்க இந்தியாவே திரள வேண்டும். தாமதம் அழிவுக்கு தான் வழி கோலும்.

தோழர்.காளியப்பன்
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here