அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இந்தியா, கார்ப்பரேட் – காவி பாசிசத்தின் கீழ் மிகப் பெரும் கொடூரமான காலகட்டத்தில் உள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்திலும், பட்டினிக் கொடுமையிலும் துன்பப்பட்டு வருகின்றனர். மதச் சிறுபான்மையினர் மீது இனப்படுகொலை தாக்குதல்கள், தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மீது ஆதிக்க சாதியினரின் வெறியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் கடும் துன்பத்தில் ஆழ்ந்து வாழ வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஒரு சிறு கும்பலான தேசங்கடந்த தரகு முதலாளிகள் அதானி, அம்பானி போன்றவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடிகளாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகள் அனைத்தும் சட்டப்படியே ஒழித்துக் கட்டப்பட்டு, பாசிச காட்டாட்சி தலைவிரித்தாடுகிறது.

இத்தகைய கொடுமையான சூழலில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் தற்போதைய அரசியலில் மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்காலத்திற்கே ஒரு முக்கியமான தேர்தலாகும்.

கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பை நடத்தி வந்த எமது இயக்கங்கள் தற்போதைய பாசிச அபாய கட்டத்தில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து,”பாசிக பா.ஜ.கவை தோற்கடிப்போம்! இந்தியாவை ஆதரிப்போம்” என்று பிரச்சாரம் செய்து வருகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள், தனித்தனியே இயங்கும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து சக்திகளையும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணிக்கு ஒன்றிணைத்து வருகிறோம்.

அதே சமயத்தில் நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியில் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டிய பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் மூலமாக கீழிருந்து ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.கவின் குண்டர் படையினரை நேருக்கு நேர் வீழ்த்துவதன் மூலமே பாசிசத்தை நிரந்தரமாக ஒழித்துக் கட்ட முடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இது குறித்து கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறோம். பாசிச பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதையும், இந்தியா கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதையும் மக்களுக்கு எளிமையாக புரிய வைக்க கேள்வி பதில் வடிவில் இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளோம்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தை தேர்தலிலும், களத்திலும் முறியடிக்க இந்த வெளியீடு ஒரு ஆயுதமாக பயன்படும் என்று நம்புகிறோம்.

000

இது குறித்த வெளியீடு மக்கள் அதிகாரம் அனைத்து கிளைகளிலும் விநியோகிக்கப்படுகிறது.

நன்கொடை: ரூ.10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here