திருச்சியில் சனாதனம் எனும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவோம்!

சனாதனத்தை எதிர்த்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நேரலை வீடியோ!

 

 

திருச்சியில் இன்று மாலை 5 மணி அளவில் ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்டில் மனிதர்களிடையே பிறப்பால் பாகுபாட்டை நிறுவுகின்ற சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் மகஇக தலைமையில் நடைபெற இருந்தது.

தமிழக காவல்துறை இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி கடிதம் தந்து விட்டனர்.

தோழமை அமைப்பின் சார்பில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து போராட்டத்தை தடையை மீறி தொடர்வோம் இந்து முன்னணி போன்ற சங்கிகளும் சனாதனம் வேண்டும் என்று அதே இடத்தில் போராட்டம் நடத்த மிரட்டல் விடுத்திருந்தனர் அதன் அடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பு சார்ந்த தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை போராடிய தோழர்களை கடுமையாக தாக்கி ஆபாச வார்த்தைகள் பேசி ரோட்டில் தரதரவென இழுத்து வந்து கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.

தற்போதைய தமிழக முதல்வர் சங்கிகளுக்கும் காவிகளுக்கும் சாதகமான ஆட்சியை நிறுவியிருக்கிறார் என்பதை தான் இது உணர்த்துகிறது. மாற்று என்று சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தவெக தலைவர் விஜயின் ஆட்சியும் இடதுசாரிகளுக்கு எதிராக இருக்கிறது என்பதை தான் இது உணர்த்துகிறது.

தோழர்களின் உறுதிமிக்க போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைதாகி மண்டபத்தில் இருக்கின்றனர். இப்போராட்டத்தில் தோழர்கள் கோவன், செல்வராசு, ஜீவா, திருச்சி செழியன், லோகநாதன், மணியரசன், அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கைதாகி மண்டபத்தில் உள்ளனர்.

போராட்ட காட்சிகள்!

தகவல்:

தோழர் மணியரசன், மாநில செயற்குழு உறுப்பினர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here