பிஞ்ச செருப்புகளை எடுத்து வையுங்கள்!!
இனி எதிர் கருத்து உள்ளவர்களை ஜனநாயக முறையில் விவாதம் நடத்தி முறியடிப்பது கதைக்கு ஆகாது என்று நம் அனைவருக்கும் உணர்த்தி உள்ளார் பாஜகவின் தலைவர் அண்ணாமலை.
தமது கட்சியை பற்றி விமர்சிக்கின்ற பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பை வீசி ஜனநாயகத்தின் பண்பை இப்படித்தான் கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுத்துள்ளார் அண்ணாமலை.
ஆர் எஸ் எஸ் பாஜக சங்பரிவாரத்தின் அபத்த கருத்துகளை இனியும் ஜனநாயக முறையில் பேசி எதிர்கொள்ள முடியும் என்ற தப்பான புரிதலில் உள்ளவர்களுக்கு இதுதான் வழி என்று சொல்லிக் கொடுத்த அண்ணாமலைக்கு நன்றி.
பிய்ந்து போன செருப்புகளை எடுத்து வைத்துக் கொள்வோம்!
தினமும் அதற்கு வேலை இருக்கிறது!
அண்ணாமலைக்கு என்ன உரிமையோ அது அனைவருக்கும் உள்ளது என்பதே உண்மை சுதந்திரம்!
- திருமலை