கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கன்னியாகுமரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன், இந்து மத வெறியர்களின் கடந்த கால வரலாறுகள் நினைவுக்கு வருகின்றன.
சங்கிகளின் கடந்த கால வரலாறு:
பிரச்சனைக்குரிய வகையில் பேசுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து, தமிழகத்தில் வளர பாரதிய ஜனதா கட்சியினர் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே தமிழகத்தின் நிதி அமைச்சரின் மீது செருப்பை வீசியாவது தமிழக மக்களின் கவனத்தை கவர சங்கிகள் முயன்றனர். ஆனால் அதிலும் மக்கள் மத்தியில் நாறிப்போயினர்.
நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற ஆர் எஸ் எஸ் பிஜேபி போன்ற இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருப்பதாகவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த எப்பொழுதும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் மாலேகான்:
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக தாங்களே குண்டு வைத்து கலவரத்தை தூண்ட முயன்ற ( மாலேகான்) வரலாறு இவர்களுக்கு உண்டு. அது மட்டுமல்ல தமது ‘தொழிற் கூடங்களில்’ குண்டு தயாரித்தது குறித்தும் இந்த நாடு அறியும்.
தமிழகத்தில்; தென்காசி, கோவையில்,தனக்குத்தானே குண்டு வைத்துக் கொண்ட நிகழ்வுகள்:
தமிழகத்தில் 2008ல் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட, தென்காசி நகரில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்து வெடிக்கச் செய்த சங்கிகள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : பாசிச ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.கவின் அடியாள் NIA வை கண்டித்து PFI தலைமையில் SDPI , மக்கள் அதிகாரம் இணைந்து ஆம்பூரில் சாலை மறியல்.
சமீபத்தில் , கோவையில் ராமநாதன் என்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர் தனக்கு கட்சியில் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கூலிப்படையை ஏவி, தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசச் செய்து மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆர் எஸ் எஸ்– பி ஜே பி இந்து மத வெறியர்களின் பயங்கரவாத செயல்கள் அனைத்தையும் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்லும் என்பதால் ஒன்று இரண்டு சம்பவங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
இதன் பின்னணியில் இருந்து பார்க்கும் பொழுது சங்கிகளே , ஆள் வைத்து, தங்களுக்குச் சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்ற முடிவுக்கு தான் வர முடியும். ஒருவேளை இவர்களுக்கு எதிரானவர்கள் யாராவது இதை செய்திருந்தால், அதுவும் இந்து மத வெறியர்களின் நோக்கத்திற்கு சாதகமாகவே அமையும் என்பதுதான் உண்மை. தமிழக அரசு , இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பான்மை இந்து மக்கள் மத்தியில் பயத்தை விதைத்து அவர்களை தங்கள் பக்கம் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ஆர் எஸ் எஸ் பிஜேபி -யினரின் நோக்கம்.
தமிழகத்தை கலவர காடாக்கி, கால் ஊன்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி யின் முயற்சியை முறியடிப்போம்.
—பாலன்