த்திரப்பிரதேசத்தில் 386, 195 கிலோ என இரண்டு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 600 கிலோ கஞ்சாவை போலீசு தங்களுடைய பாதுகாப்பு கிட்டங்கியில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது, கஞ்சாவை சமர்ப்பிக்க சொல்லி நீதிபதி கேட்கும் பொழுது, காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “எலி தொல்லை இல்லாத இடமே அந்த காவல் நிலையத்தில் இல்லை. உருவத்தில் சின்னதாக இருந்தாலும், எலிகளுக்கு போலீஸ் என்ற பயமே (!) சுத்தமாக இல்லை. போலீசாராலும் எலித்தொல்லையை தீர்க்க முடியவில்லை. பெரும்பாலான கஞ்சாவை எலிகள் தின்று தீர்த்துவிட்டன. மிச்சமிருந்த கஞ்சாவை அதிகாரிகள் அழித்துவிட்டனர்” என்று வாதாடியிருக்கிறார்.

எலிகள் தின்று தீர்த்ததாக சொன்ன கஞ்சாவின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 60 லட்சம் என கணக்கிடுகிறார்கள். கஞ்சாவை எலிகள் தான் சாப்பிட்டன என்பதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். எப்பொழுதும் போலீசு தொலைந்து போனதை கணக்கில் காட்ட, திருடுவதை தொழிலாக கொண்டவர்களை கைது செய்து, பொய் வழக்கைப் போட்டு கணக்கை தீர்த்துவிடுவார்கள். இப்பொழுது தங்கள் பாதுகாப்பில் இருந்த கஞ்சாவை விற்று தின்றதை மறைப்பதற்கு, எலிகள் மீது பழியை போட்டுவிட்டார்கள். பாவம் எலிகள்.

இப்படி பதில் அளிப்பது முதன் முறையல்ல! ஏற்கனவே 2020ல் இதே போலீஸ் ஸ்டேசனில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 400 கிலோ கஞ்சாவை இதே கிட்டங்கியில் வைத்திருந்தார்கள். நீதிபதி சமர்ப்பிக்க கோரும் பொழுது, இப்பொழுது சொன்னது போல அப்பொழுதும் ”எலிகள் தின்று தீர்த்துவிட்டன” என்ற பதிலை சொல்லியிருக்கிறார்கள். இப்படி எலிகள் தின்று தீர்த்தது உண்மை (!) என்றே வைத்துக்கொண்டாலும், அதற்கு பிறகாவது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. யோகி ஆதித்யநாத் ஆள்கிற “புண்ணிய பூமி” அல்லவா! ஆகையால் இப்படி கூசாமல் பொய் சொல்ல துணிகிறார்கள். உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்தக்காரர்களான இந்துத்துவ சாமியார்கள், கங்கா புத்திரர்கள், கரகர ஹரஹர மகாதேவ் ஆட்களில் பலரும் கஞ்சா குடித்து தான் எப்பொழுதும் போதையில் அம்மணமாக திரிகிறார்கள். இப்பொழுது உத்திரப்பிரதேச அரசு கஞ்சாவை ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறதாம். ஒருவேளை அதில் மருத்துவ குணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கவும் ஆலோசனை செய்யக்கூடும்.

இதையும் படியுங்கள்: அன்று குஜராத், நாளை உத்தர பிரதேசம்

இது போல இன்னொரு பிரபல வழக்கு ஒன்று உள்ளது. 2017ல் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்ட சமயம். அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை அவ்வப்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி பிடித்து வந்தனர். இந்த வகையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 9 லட்சம் லிட்டர் மதுவகைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த பாட்டில்களைத் திறந்து மதுவை எலிகள் குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாநில காவல்துறையினர் ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சில மதுவகைகளை போலீசார் அழித்துவிட்டதாகவும், மீதமிருந்ததை எலிகள் குடித்துவிட்டன என்று பதில் அளித்தார்கள். இது குறித்து விசாரணை நடத்த பாட்னா மண்டல ஐஜி விசாரணை நடத்த உத்திரவிட்டார். பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இது போல தென்னமெரிக்க அர்ஜெண்டினாவின் ஒரு சிறிய நகரத்தில், 6000 கிலோ கஞ்சாவை (Weed) கைப்பற்றி போலீசின் கிட்டங்கியில் பாதுகாத்ததில், 540 கிலோவை எலிகள் தின்றுவிட்டன என போலீசு பதில் அளித்திருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டு அதிகாரிகளையும் கூண்டோடு வேலையிலிருந்து தூக்கிவிட்டனர்.

நம்ம இந்தியாவில் மட்டுமல்ல! உலகம் முழுவதுமே போலீசு பொய் கேசு எழுதுவதிலும் கதை சொல்வதிலும் பெரிய கேடிகளாகத் தான் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here