டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிர்ப்பு: மதுரையில் விவசாயிகள் பேரணி.

0
 வல்லாளப்பட்டி,கள்ளப்பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட மேலூரை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துள்ளனர்.

ன்று 07.01.2025 இல் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்று, தமுக்கம் மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் நெருங்கி வருகிறது. ஆனால் அதைக் கொண்டாடும் மனநிலையில் மதுரை மேலூரை சுற்றியுள்ள பல கிராமங்கள் இல்லை. பல ஊர்கள் வேதாந்தாவிற்கு தாரை வார்க்கப்பட்டு விடுமோ என்ற பரிதவிப்பில் தூக்கத்தை தொலைத்து பல மாதங்கள் ஆகின்றன. மோடி அரசு சுரங்க அனுமதி என்ற தீவிர தாக்குதல் கொடுத்துள்ள இந்நிலையில் எப்படி பொங்கல் இனிக்கும்?

“டெல்லி சலோ” பாணியில் தமுக்கம் சலோ!

சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தை சிறிய லோடு வண்டிகளின் மூலமும், கால் நடையாகவுமே கடந்து வந்துள்ளனர். வழியில் ஆங்காங்கே காவலர்கள் மறித்துள்ளனர். மக்கள் பேரிகார்டு தடுப்புகளை மீறி காவலர்களை விலக்கி வழியைப் ஏற்படுத்திக்கொண்டு நகரத்திற்குள் முன்னேறி வருகின்றனர். போராட்டத்தில் அணிவகுத்து வரும் மக்கள் தொடர்ந்து முன்னேறியுள்ளனர்.

தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது. நடை பயணமாக பேரணியாக வருவதற்கும் அனுமதி தரப்படவில்லை என்பதாக மீடியாக்களில் செய்திகள் வருகின்றன.

போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என எடப்பாடி திருவாய் மலர்ந்துள்ளார். இதே வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தூத்துக்குடியில் மக்கள் போராடிய போது, இவர் முதலமைச்சராக இருந்து கொண்டு எந்த லட்சணத்தில் ஜனநாயக உரிமைகளை மதித்தார் என்பதை நாடே அறியும்.

ஆதரவு கரம் கோர்க்கும் வணிகர்கள்!

விவசாயிகளின், கிராம மக்களின் நியாயமான போராட்டத்திற்கு உறுதுணையாக வணிகர் சங்கங்களும் கடையடைப்பு நடத்தி ஆதரித்துள்ளன. பேரணியில் நடந்து செல்லும் மக்களுக்கு ஆங்காங்கே குடிநீர் உணவு உள்ளிட்டவைகள் தரப்படும் காணொளிகள் மீடியாக்களில் ஒளிபரப்பாகின்றன.


படிக்க: டங்ஸ்டன் வெட்ட வரும், வேதாந்தாவை விரட்டி அடிப்போம்!


முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தினரும் இதில் பங்கெடுத்துள்ளனர். டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்துவதோடு கூடுதலாக, இப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வல்லாளப்பட்டி,கள்ளப்பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட மேலூரை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இப்போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துள்ளனர்.

மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு!

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல மெரினா போராட்டம் போல பற்றி படரும் தன்மையுடன் உள்ளது.

மீண்டும் தூத்துக்குடி பாணியில் அரசு பயங்கரவாதத்தின் மூலம் போராட்டம் நசுக்கப்படாதபடி இம்முறை வெற்றி ஈட்டப்பட்டாக வேண்டும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.


படிக்க: அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக கிராமசபை தீர்மானம்!


தற்போது காவிபாசிஸ்டும் மோடியின் கூட்டாளியுமான எடப்பாடி தமிழகத்தின் முதலமைச்சராக இல்லை. ஆளும் திமுக அரசும் சட்டமன்றத்தில் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. திமுக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டம் போல் இல்லாமல், தெளிவாக தமிழக மக்களின் தரப்பில், விவசாயிகளின் தரப்பில் துணையாக நின்றாக வேண்டும்.

இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை தாரைவாக்கும் திட்டங்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு போராடுவது புதிது அல்ல. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உத்தரப்பிரதேச விவசாயிகள் எஸ் கே எம் தலைமையில் முன்னெடுத்து உலக அளவில் ஆதரவைப் பெற்ற டெல்லி முற்றுகையிலிருந்து பெற்றுள்ள படிப்பினையாகவும் மேலூர் விவசாயிகளின் இந்தப் பேரணி உள்ளது.

கார்ப்பரேட் காவி பாசத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக, வேதாந்தாவை மீண்டும் ஒருமுறை மதுரையிலும் பணிய வைத்து சாதனை படைப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here