பாசிச BJP யை தோற்கடிப்போம் INDIA வை ஆதரிப்போம் என்கின்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் தலைமையில் திருச்சியில் 2024 ஜனவரி 07 ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் மாநாடு நடத்த உள்ளோம் இம்மாநாட்டை விளக்கி தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக பிரச்சாரம் சுவர் விளம்பரங்கள் என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

இந்நிலையில் BJP யின் சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி( எ ) சத்தியேந்திரன் என்பவர் எமது அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் தோழர் வைகை சரவணன் அவர்களை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பாசிச பிஜேபி யை தோற்கடிப்போம் என எழுதுவியா அரை மணி நேரத்திற்க்குள் அந்த சுவர் விளம்பரத்தை அழிக்கவில்லை என்றால் உன் கழுத்தை அறுத்து விடுவேன் என்றும் உள்ளுரிலேயே இல்லாமல் செய்து விடுவேன் என்றும் உச்ச பட்சத்தை வார்த்தைகளால் வன்மத்தைக்காட்டி உயிர் பிழைத்துக்கொண்டு வேண்டும் என்றால் நான் பேசுவதை பதிவு செய்து கொண்டு காவல் நிலையத்தில் சென்று தஞ்சம் அடைந்து கொள் எனவும் பகிரங்க மாக கொலை மிரட்டல் செய்துள்ளான்.இவனது கூட்டாளியான மேலமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் வழக்கறிஞர் கருப்பையா என்பவர் நீங்கள் எழுதிய சுவர் விளம்பரத்தால் அண்ணன் கடும் கோபத்தில் இருக்கிறார் நேற்று இரவு உன்னை தூக்கி தோட்டத்தில் முடிக்கலாம் என பேசினார்கள் பிரச்சனை பெரிதாகிவிடும் தேர்தலுக்குள் கொலை விழுந்து விடும் எனவே உடனடியாக அந்த சுவர் எழுத்தை அழித்து விடு என்று இரு பிஜேபி சங்கிகளும் பேசிய கொலை வெறி பேச்சு நாடு முழுக்க தீயாய் பரவியது.

சிறையில் தள்ள வேண்டும் என்று புகார் கொடுத்தும் சிவகங்கை மாவட்ட காவல்த்துறை இந்த இருவர் மீதும் சாதாரண வழக்கை பதிவு செய்து தப்பிக்க வைத்துள்ளது என்பதை கண்டிக்கிறன்ற வகையிலும் உடனடியாக இருவரும் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும் என்பதையும் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளூர்வர் சிலை அருகில் காலை :11.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர். வழக்கறிஞர் பா. நடராஜன் தலைமை தாங்கினார்.

கண்டன உரையாற்றியவர்கள் :

தோழர். மீ. த. பாண்டியன். மாநிலத்தலைவர். தமிழ் தேச மக்கள் முன்னணி.

தோழர். வழக்கறிஞர். பசுபொன் பாண்டியன். நிறுவனத்தலைவர். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்.

தோழர். பகத்சிங். தலைவர். குத்தகை விவசாயிகள் சங்கம். தமிழ் நாடு.

தோழர். வால்டர். மாவட்ட செயலாளர். SUCI கம்யூனிஸ்ட்.

தோழர் .மதிவாணன். மாவட்ட செயலாளர் CP- ML. லிபெரேசன்.

தோழர். பேரறிவாளன். மாநிலப் பொதுசெயலாளர். தமிழ் புலிகள் கட்சி.

தோழர். திருநாவுக்கரசு. CPM மாநில செயற்குழு உறுப்பினர். காளை யார்கோவில்.

தோழர். குமரன். புரட்சிகர இளைஞர் முன்னணி. மதுரை.

தோழர். இன்குலாப். மாமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர். ராஜ்குமார் நிறுவனத்தலைவர் தமிழக முன்னேற்ற கழகம்.

தோழர். நாகராஜன். மாநில செயற்குழு உறுப்பினர். மக்கள் அதிகாரம். சிவகங்கை.

நன்றியுறையாக தோழர். வீரணன். மாவட்ட செயற்குழு உறுப்பினர். மக்கள் அதிகாரம்.

அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஜனநாயக சக்திகள் முற்போக்கு இயக்க தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here