சாம் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு மதவெறி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

இந்துக்களின் நிலங்களை இஸ்லாமியர்களுக்கு விற்பதைத் தடுக்க அசாம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்து முஸ்லிம்களுக்கிடையே நிலத்தை விற்க – வாங்க வேண்டுமெனில் முதலமைச்சரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவோம் என்றும் இவர் கூறியுள்ளார்.

மேலும் முஸ்லிம்கள் இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து மதம் மாற்றுவதற்எதிராக அதாவது “லவ் ஜிகாத்”திற்கு எதிராக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் இந்த நபர் எப்படிப்பட்ட இந்து மத வெறியராக இருக்கிறார் என்பதற்கு மேற்கூறியவை தெளிவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370 வது சட்டப்பிரிவை நீக்கி விட்டோம். இனி இந்தியாவில் உள்ள இந்துக்கள் யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலத்தை வாங்கலாம் என்னும் படியாக மாற்றத்தை கொண்டு வந்து விட்டோம். ஒரு மாபெரும் சாதனையை செய்து விட்டோம்’ என்றெல்லாம் பாஜக வினர் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம் மக்களின் நிலத்தை யார் வேண்டுமானாலும் இஸ்லாமியர்கள் அல்லாத இந்துக்கள் கூட வாங்கலாம் என்பது இவர்களுக்கு சரியானதாக தெரிகிறது. ஆனால் அசாமில் உள்ள இந்துக்களின் நிலத்தை இஸ்லாமியர்கள் வாங்குவது இவர்களுக்கு தவறானதாக தெரிகிறது.

ஜம்மு காஷ்மீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பொழுதும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டப்பிரிவு 370 உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் மட்டும் அம்மாநிலத்தின் நிலத்தை வாங்கலாம் – விற்கலாம் என்று வகை செய்யப்பட்டிருந்தது. அதிலும் கூட ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் என்ற வகைப்படுத்தப்படாமல் யார் வேண்டுமானாலும் யார் நிலத்தை வேண்டுமானாலும் வாங்கலாம் என்றுதான் இருந்தது. முஸ்லிம்களின் நிலத்தை இந்துக்களுக்கு விற்கக் கூடாது என்று அங்கு சட்டம் போடப்பட்டிருக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் உள்ள முஸ்லிம்கள் நிலத்தை இந்தியாவில் உள்ள மற்றவர்கள் வாங்க முடியாதது குறித்து பேசி மத வெறியை கிளப்புகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, அசாமில் உள்ள இந்துக்களின் நிலத்தை இஸ்லாமியர்கள் வாங்குகிறார்கள் என்பதைக் கூறியும் மறுபுறம் மத வெறியை கிளப்புகிறார்கள்.

இந்த ரத்த வெறிபிடித்த அயோக்கியர்களான ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பல் மத வெறியை பரப்பி மக்களை பிளவு படுத்தி மோத விட்டு அதன் மூலம் குளிர்காய்வதையே தங்களின் இயல்பாக கொண்டவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

லவ் ஜிகாத்… லவ் ஜிகாத் என்று எப்பொழுதும் ஓயாமல் ஓலமிட்டுக் கொண்டிருக்கும் இந்த ஓநாய்கள் அதற்கு ஆதாரமாக ஒரு சிறு நிகழ்வைக் கூட இதுவரை காட்டியது இல்லை. ஆனால் இந்த ஆர்எஸ்எஸ் பாஜக ஓநாய்கள் இஸ்லாமியப் பெண்களை பாலியல் ரீதியாக சிறைத்துக் கொன்ற பல்வேறு சம்பவங்கள் இந்த நாட்டில் நடந்துள்ளன.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நாடோடி குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிபா என்ற 8 வயது பெண் குழந்தையை 2018 ஆம் ஆண்டு ஒரு காம வெறி பிடித்த கும்பல் போதை மருந்து கொடுத்து பல நாட்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யது கொலை செய்து விட்டது.

படிக்க: பாலியல் ஜல்சா கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கிய இந்திய மல்யுத்த வீராங்கனைகள்!

அப்பொழுது மாநிலத்தில் பாஜக அங்கம் வகித்த கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது. இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நடந்த பேரணியில் மாநிலத்தில் அமைச்சர்களாக இருந்த சௌதரி லால் சிங் மற்றும் சந்தர், பிரகாஷ் கங்கா இருவரும் கலந்து கொண்டதைக் கண்டு உலகமே ஆத்திரத்தில் காரித் துப்பியது.

இவர் காப்பாற்ற துடித்த அந்த காம கொடூரர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் நடத்தப்பட்ட கலவரத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் இந்து மதவெறியர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

இப்படிப்பட்ட காமக்கொடூரர்களை காப்பாற்ற துடிக்கும் காவி வெறிக் கும்பல் இஸ்லாமிய இளைஞர்கள் லவ் ஜிகாத் செய்கிறார்கள் என்று அயோக்கியத்தனமாக பொய் உரைத்து மத வெறியை பரப்பிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான மதவெறி பேச்சை பாஜக வைச் சேர்ந்த அசாம் மாநிலத்தின் மாநில முதல்வரே பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த காவி பாசிஸ்டுகள் தங்கள் கட்சியை வளர்ப்பதற்குபொய்களை பரப்பி மக்களிடையே மத வெறியை வளர்த்து மதக்கலவரங்களை நடத்துவதைத் தான் முதன்மையாக வழியாக கொண்டு செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்து இவர்களை முறியடிக்க அனைவரும் களத்தில் இறங்க வேண்டும்.

குமரன்

ஆதாரம்: https://thewire.in/communalism/will-bring-love-jihad-law-with-life-term-curb-land-sales-to-muslims-himanta-biswa-sarma#:~:text=COMMUNALISM,Himanta%20Biswa%20Sarma

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here