சிதம்பரம் தில்லை நடராஜன் கோயிலில் பக்தர்களை தாக்கும் கிரிமினல் குற்றம் புரியும் சட்டவிரோத செயலில் ஈடுபடும் தீட்சிதர்களை கைது செய் !
இந்து அறநிலைத்துறையே… தில்லை கோவிலை கையகப்படுத்து!
என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் சிதம்பரம்
துணை ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் தமிழில் பாடினால் தீட்டு என்று சொல்லியும் மீறி பாடும் பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும் வருகிறது தீட்சிதர் கும்பல். காலம் காலமாக கொலை கொள்ளை முறைகேடு ஊழல் என்று பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளாலும் தில்லை கோயிலை தங்கள் சொத்து போல வைத்துக்கொண்டு வாடகைக்கு விட்டு பல கோடிகளை அமுக்கிவுள்ளது கும்பல்.
இதனையொட்டி பத்திரிக்கையாளரிடம் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ அளித்த பேட்டியினை வெளியிடுகிறோம்.