குஜராத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 41, 621 இளம் பெண்கள் மாயமாகி உள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

“காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர். காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல் துறையினர் தீவிரமாக விசாரிக்காகாது தான், இதுபோன்ற சம்பவம் அதிகரிக்க காரணம்” என்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா .

பெரும்பான்மையான வழக்குகளில் காணாமல் போன பெண்கள் ஆள் கடத்தல் கும்பலால் மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுகிறார்கள் என்பது தனது பணி காலத்தில் தெரியவந்ததாக முன்னாள் காவல்துறை கூடுதல் தலைவர் (Former additional director general of police ) Dr.ராஜன் பிரியதர்ஷி கூறுகிறார்.

இந்தியாவை காப்பாற்ற வந்த அவதார புருஷனாக தன்னை காட்டிக் கொள்ளும் மோடியின் குஜராத்தில் இப்படிப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஆர். எஸ். எஸ் ., பாஜக கும்பல் வாய் திறக்கவில்லை. நமக்கெல்லாம் இப்பொழுதுதான் இந்த அறிக்கை வெளிவந்த பிறகு இது தெரிய வருந்திருக்கிறது. இத்தகைய பிரச்சனை இருப்பது இந்த கும்பலுக்கு ஏற்கனவே தெரியும்.

இப்படி ஒரு படு பயங்கரமான பிரச்சனை இருப்பது தெரிந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதும் எதையும் புடுங்காத பார்ப்பன பயங்கரவாதிகள் மக்களிடையே பொய்களைப் பரப்பி மதவெறியூட்டுவதற்கு எப்பொழுதும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் “தி கேரளா ஸ்டோரி” படத்தில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ்(ISIS) அமைப்பில் இணைக்கப்பட்டதாக இந்த படத்தில் காட்சி வருகிறது. இது பொய் என்று தெரிந்திருந்தும், இந்தப் படத்தை திரையிடுவதன் மூலமாக இந்து மத வெறியை மூட்டலாம் மக்களை மதரீதியாக பிழக்கலாம் என்ற ஆசையில் மத்திய பிரதேச மாநிலத்தின் பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை விஞ்சும் குஜராத் கொள்ளையர்கள்!

தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்டு இந்தியா முழுவதும் மத வெறியை வளர்க்கலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த சங்கிகளின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது போல் ஆகிவிட்டது குஜராத் பெண்கள் கடத்தல் பற்றிய செய்தி.

கடத்தப்பட்ட பெண்கள் அனைவரும் இஸ்லாமியப் பெண்களாக இருந்திருந்தால் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கு– இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பிள்ளை பெற்றுக் கொடுக்க மனைவிகளாக சென்று விட்டார்கள் என்று பொய் பரப்பி மதவெறியூட்டி இருப்பார்கள். ஒருவேளை கடத்தப்பட்டவர்கள் அனைவரும் இந்து பெண்களாக இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை கடத்தி திருமணம் செய்து கொண்டுள்ளதாக கதை அளந்து மதவெறியூட்டி இருப்பார்கள். ஆனால் எதார்த்தத்தில் கடத்தப்பட்டவர்களில் இந்து முஸ்லிம் பெண்கள் கலந்து தான் இருப்பார்கள் என்பதால் இந்து மதவெறியர்களால் இப்படிப்பட்ட பொய்களை பரப்ப முடியவில்லை என்பதுதான் உண்மை.

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது எப்படி இருப்பினும் கடத்தப்பட்டவர்களில் இந்து பெண்களும் இருப்பார்களே அவர்களுக்காக பாஜகவினர் ஏன் துடிக்கவில்லை? ஏனெனில் கடத்தப்பட்ட து மாடுகள் அல்லவே!!

மாடுகளுக்காக மட்டும் தான் சங்கிகள் துடித்து எழுவார்கள் . அதுவும் மக்களை மதரீதியாக பிளப்பதற்காக மட்டும்தான்!!

  • பாலன்

செய்தி ஆதாரம்: The New Indian express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here