JNU மாணவர் உமர் காலித்தை (UAPA) ஊபா சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக சிறையில் அடைத்துள்ளது பாசிச பாஜக அரசு. ஒரு வருடமாக ஜனநாயக விரோத ஊபா சட்டத்தின் கீழ் உமர் காலித் சிறைப்படுத்தப்பட்டத்தை கண்டித்து விடுவிக்க கோரியும், உபா சட்டத்தை ரத்து செய்வதின் அவசியத்தையும் வலியுறுத்தி AIYSA, JNU மாணவர்கள் சங்கம் சார்பில் முழங்களை எழுப்பினர்.ஜனநாயக விரோத அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பாய் திரண்டு பாசிச அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் முன் களத்தில் நின்று மக்களை அறை கூவி அழைக்கின்றனர்!!