ஒரு சொல்
பிரிவினையைத் உண்டாக்குகிறது…
ஒரு சொல்
மதவாதத்தை விதைக்கிறது…
ஒரு சொல்
நட்பை முறிக்கிறது…
ஒரு சொல்
பண்பை சிதைக்கிறது…
ஒரு சொல்
மனிதத்தை புதைக்கிறது…
ஒரு சொல்
வெறுப்பை உமிழ்கிறது…
ஒரு சொல்
சக மனிதனை காயப்படுத்துகிறது…
ஒரு சொல்
கொலைசெய்யவும் தூண்டுகிறது..
இப்படியாக
அந்த ஒரு சொல்,
அவமானகரமானதாகவே மாறிக்கொண்டிருக்கிறது
ஒட்டுமொத்த தேசத்திற்கும்.
- பா.மகாலட்சுமி