வரலாற்றுப் புரட்டுகளைத் தொடர்ந்து மருத்துவ அறிவியலிலும் புரட்டு!
ஹிப்பாக்ரட்டிஸ் எதிர் சரகர் விவகாரம்!
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்தை துவங்கும் போது சரகர் பெயரால் உறுதிமொழி ஏற்க கல்லூரியின் டீன் ரத்தினவேல் நிர்ப்பந்தித்ததையடுத்து மாணவர்கள் சரகர் பெயரால் உறுதிமொழி ஏற்றனர்.
பொதுவாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவத்தின் தந்தையான கிரேக்க நாட்டை சேர்ந்த ஹிப்போகிரேட்டஸ் பெயரால்தான் உறுதிமொழி ஏற்றுக் கொள்வார்கள் ஏனென்றால் ஹிப்போகிரேட்டஸ் நல்லறிவு, அன்பு, இரக்கம், நேர்மை போன்றவற்றை தனது போதனையாக முன்வைத்துள்ளார்.
மருத்துவ தொழிலில் ஈடுபடும் மாணவர்கள் வியாபார ரீதியாக இந்த தொழிலை அணுகாமல் சமூகத்திற்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதால்தான் இவர் மீது உறுதிமொழி ஏற்கிறார்கள்.
ஆனால் சரக சம்ஹிதை என்ற நூலை எழுதியதாக கூறப்படும் சரகர் பெயரால் உறுதி ஏற்பது மருத்துவ சேவை தொழிலுக்கே எதிரானது. ஏனென்றால் சரகரின் போதனைகள் மன்னரை வெறுப்பவர்களுக்கும், மன்னர் வெறுப்பவர்களுக்கும், கணவன் இல்லாத மனைவிகளுக்கும் வைத்தியம் செய்யக் கூடாது என்பதை சரகர் தனது போதனைகளாக வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் பைத்தியங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவின் பாரம்பரியத்தை முன்வைக்கிறோம் என்ற பெயரில் ஆயுர்வேதம் என்ற ஒன்றை மருத்துவ முறையாக முன்வைக்கின்றனர். இப்படிப்பட்ட ஆயுர்வேதம் மற்றும் சோதிடம் இரண்டையும் இணைத்து அதிலிருந்து கிடைத்த குப்பைகளைதான் மருத்துவக் குறிப்புகளாக அந்த சரக சம்ஹிதை முன்வைத்துள்ளது. அது மட்டுமல்ல சரக சம்ஹிதை என்பது முழுமையான மருத்துவ நூல் அல்ல என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதனை முன்வைத்து மருத்துவ மாணவர்களை உறுதி எடுக்க வைப்பது கேடு கெட்ட செயலாகும்.
தமிழகத்தில் பிரபலமான மதுரை மருத்துவக் கல்லூரியில் அதுவும் திமுக அமைச்சர்கள் முன்னிலையிலேயே இதுபோன்ற அபத்தங்கள் நடைபெற்றிருப்பது காவி பாசிசத்தின் செல்வாக்கை நமக்கு எச்சரிக்கிறது. கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மட்டுமல்ல இன்னும் பல ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அல்லது அபிமானிகள் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். சமயம் வரும்போது தனது விஷக்கொடுக்கை நீட்டுவார்கள் என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய எச்சரிக்கையாகும்.
பொதுவாக மருத்துவம் என்பது சேவை என்ற தன்மையிலிருந்து மாறி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ள இந்த சூழலில் மாணவர்களை மேலும் சீரழிக்கின்ற வகையில் இதுபோன்ற குப்பைகளை அவர்கள் மூளையில் திணிப்பது அபாயகரமானது.
இதுபற்றி ஷாஜகான் புதுடெல்லி எழுதிய பதிவையும் இத்துடன் இணைக்கிறோம்.
000