புல்வாமா தாக்குதல் ஆட்டம் காணும் பாஜக | காணொளி

0

புல்வாமா தாக்குதல் குறித்து காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால மாலிக் வெளியிட்ட கருத்தால் பாஜக ஆட்டம் கண்டுள்ளது. பாஜகவின் போலி தேசபக்தியும் சந்தி சிரிக்கிறது…

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து மோடி, அதானி கும்பல் உலகம் முழுவதும் நாறி வருகிறது. மக்கள் மத்தியிலும் அம்பலப்பட்டு போயுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் கேள்வி எழுப்பிய பின்னரும் பதிலளிக்க முடியாமல் திணறிய பாசிச கும்பல், அதானிக்கு பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அதானியின் இந்திய பிரதமர் மோடி விமானத்தில் செல்லும் படத்தை காட்டி கேள்வி எழுப்பிய ராகுல்காந்தியை பொய் வழக்கு போட்டு இரண்டு வருடம் சிறை தண்டனை விதித்து எம்.பி பதவியை பறித்தது.

இப்படியான பாசிச நடவடிக்கைகளில் ஈடுபடும் கார்ப்பரேட் காவி கும்பலை தோலுரிக்கும் விதமாக மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராஜு அரண்செய் சேனலுக்கு அளித்த பேட்டியை வெளியிடுகிறோம்.

பாருங்கள்… பகிருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here