பத்திரிக்கைச் செய்தி

25-9-2022

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு எதிராக சமூக நல்லிணக்கப் பேரணியை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர். தொல் திருமாவளவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழக மக்கள் அனைவரும் ஆதரித்து பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் மக்கள் அதிகாரம் அமைப்பு அக் -2 சமூக நல்லிணக்கப் பேரணியில் முழுமையாக ஆதரித்து பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் இதுநாள்வரை இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் மத நல்லிணக்க சூழலை சீர்குலைத்து மதக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தும் நோக்கில் ஆர் எஸ் எஸ் அமைப்பு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி தமிழக முழுவதும் 51 இடங்களில் நடத்த இருக்கும் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இதற்கு எதிராக மேல் முறையீடு செய்து வழங்கபட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோருகிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முறையில் இது போன்ற மதக்கலவரங்களை மத வன்முறைகளை தூண்டும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் பாஜகவின் காவி பாசிச அரசியலை எதிர்த்து போராடுகின்ற அனைத்து அரசியல் இயக்கங்கள் ஜனநாயக அமைப்புகள் அனைவரும் தோழர் தொல். திருமாவளவன் அறிவித்த அக்டோபர் 2 மத நல்லிணக்க ஊர்வலத்தில் பெருமளவில் பங்கேற்று அதை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திரு ஆ ராசா அவர்கள் இந்து மதவெறி சனாதன கருத்துக்களை அம்பலப்படுத்தி பேசியதற்கு எதிர் வினை என்கிற பெயரில் ஆர் எஸ் எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தமிழகம் முழுவதும் கலவரங்கள் செய்வது மட்டுமல்லாமல் ஆ.ராசாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கவும் செய்கின்றனர். இந்த பாசிச பயங்கரவாத கும்பலின் சட்ட விரோத கொலை மிரட்டலுக்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தால் அதை திசை திருப்பும் நோக்கில் கலவர செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த காலத்தில் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்களே பெட்ரோல் குண்டுகளைத் தங்கள் வீடுகள் கடைகள் வாகனங்கள் மீது வீசி இஸ்லாமியர்கள் மீது பழிபோடும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதை தமிழகம் நன்கு அறியும். இப்போதும் அதே வழியில் தமிழகத்தில் பாஜகவினர் தாக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் கருத்தை பரப்புவதற்கு அவர்களே இத்தகைய இழிவான பெட்ரோல் குண்டுகள் வீசும் செயலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆகவே தமிழக காவல்துறையும் புலனாய்வுப் பிரிவு இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சுகளின் பின்னணியில் இருக்கும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தை வட இந்தியா போல் சாதி மத வெறி மூலம் கலவர பூமியாக்கி கால்பதிக்க ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டம் பல செயல்களை செய்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அக்டோபர் 2 இது பெரியார் பிறந்த பூமி என்பதை நிருபிக்க ஆர்.எஸ்.எஸ் நடத்த ஊர்வலத்திற்கு எதிராக நடக்க உள்ள சமூக நல்லிணக்க ஊர்வலத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here