செஞ்சட்டை பேரணி | தோழர் ராஜூ உரை

மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரை!

4

மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் 100க்கும் மேற்பட்ட அமைப்புகளும். பல ஆயிரகணக்கான மக்களும் கலந்ந்துக் கொண்டார்கள். மக்கள் அதிகாரம் அமைப்பும் மற்றும் அதன் தோழமை அமைப்புகளையும் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டார்கள். இந்த பேரணி பொதுக்கூட்டம் பாசிஸ்டுகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் அதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த இணைப்பு என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் பாசிசத்திற்கு எதிரான குரலாக ஒலிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராஜூ ஆற்றிய சிறிய உரையை பாருங்கள்! பகிருங்கள்!!

மக்கள் அதிகாரம் youtube channelஐ subscribe செய்யுங்கள்!

#செஞ்சட்டை_பேரணி #RED_MARCH #மக்கள்_அதிகாரம்

4 COMMENTS

  1. வெள்ளை சட்டை கம்யூனிஸ்ட் ராஜு பாய்

  2. கருப்பு சட்டை போடும் ஐயப்ப பக்தர்களையும், செவ்வாடை தரிக்கும் பங்காரு பக்தர்களையும் கண்டு பித்தம் தலைக்கேறி நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஐயா வேலுச்சாமியின் குரல்.

    இதன் மூலம் தாடி வைத்தவர்கள் எல்லாம் தாகூர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், சுருட்டு குடிப்பவர்கள் எல்லாம் சர்ச்சில் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று சிறுவயதில் விடலைத்தனமாக கடி ஜோக் அடித்தது தான் நினைவுக்கு வருகிறது.

  3. சிகப்பு சட்டை போடவே விரும்பாத மனநிலை எதை உணர்த்துகிறது…

    செஞ்சட்டை பேரணியில் கூட சிவப்பு போட மறுப்பது என்ன ரகமொ…..

    சிவப்பை கண்டு பயப்பவர்கள் சிவப்பு பற்றி பேச என்ன அருகதை உள்ளது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here