மொபைல் மூலம் நமது தளத்தின் பதிவுகளை பார்ப்பவர்களை குறிவைத்து கடந்த சில மாதங்களாக ஏவப்பட்ட ஹேக்கர்களின் Redirect தாக்குதல்களை முறியடித்துள்ளோம்.
மீண்டும் துடிப்புடன் செயல்பட தொடங்கியுள்ளது மக்கள் அதிகாரம் இணையதளம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது தளத்தில் கட்டுரைகளை பார்க்க முடியவில்லை மீண்டும் மீண்டும் ரீ டைரக்ட் ஆகிறது என வாசகர்களான நீங்கள் தொடர்ச்சியாக புகார் அளித்தீர்கள். எங்கள் மீதான IT Wing-களின் சைபர் தாக்குதலுக்கான அடிப்படை எது?
தமிழர்களிடையே கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு அரசியலை கூர்மையாக கொண்டு செல்லும் பணியில் நமது அரங்குடன் இணைந்து நமது தளமும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருவதை அனைவரும் அறிவீர்கள்.
நாங்கள் சரியாகத்தான் வினையாற்றுகிறோம் என்பதற்கான நிரூபணமாகவே எம் மீதான ஹேக்கர்களின் திட்டமிட்ட தாக்குதல்களை பார்க்கிறோம்.
உழைக்கும் மக்களின் எதிரிகளால் இப்படி தாக்குதலுக்கு உள்ளானதை வைத்து பெருமிதம் அடைகிறோம். எமது எதிரியின் இத்தகைய எதிர்வினைக்கு காரணமாக இருப்பது எமது கூர்மையான அரசியல் தாக்குதல்களே.
எமது இணையதளம் மட்டுமல்ல, எமது முகநூல் பக்கமும் கூட அடுத்தடுத்து முடக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் புதிதாக தொடங்கி, முகநூல் வாசகர்களிடம் எமது அரசியல் கருத்துக்களை கொண்டு செல்வதற்கான போராட்டத்தில் ஊன்றி நின்றே செயல்பட்டு வருகிறோம்.
இது நம் எதிரிகளை தூங்கவிடாமல் அலைக்கழித்துள்ளது. அதனால்தான் எமது குரல்வளையை நெரிக்க இதைவிடாமல் முயற்சிக்கின்றனர்.
தளத்தை மீட்டெடுக்கும் போதே, மீண்டும் மீண்டும் தொடுக்கப்பட்ட சைபர் தாக்குதல்கள் மூலம் எமது மேற்கண்ட கருத்து மேலும் உறுதி அடைகிறது.
வாசகர்களான உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து இத்தகைய கார்ப்பரேட் – காவி பாசிச கும்பல்களின் நேரடியான அல்லது மறைமுகமான கையாட்களின் சதிகளை முறியடிப்போம் என உறுதி கூறுகிறோம்.
சில மாதங்களாக எமது பதிவுகளை பார்க்க முடியாமல் இடைமறிக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட மொபைல் வாசகர்களின் தொடர்ச்சியான ஆதரவினை வேண்டுகின்றோம்.
நமது எதிரிகளின் மலிவான இந்த தாக்குதல் தந்திரங்களை முறியடித்து கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு சவக்குழி எழுப்புவோம்.
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர் குழு
எமது வாட்சப் சேனலை FOLLOW செய்து இணையதள செய்திகளை பெற்றிடுங்கள்.