யோகியின் சாம்ராஜ்ஜியத்தில் முன்னாள் MLA அத்திக் அகமதுவை, போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போதே ரவுடிகள் சுட்டுத்தள்ளிவிட்டு ”ஜெய் சிரீ ராம்” என முழங்குகின்றனர். அதே உபியில் ஜலான் மாவட்டத்தில் தேர்வெழுதி திரும்பிய கல்லூரி மாணவி ரோஷினி, காவல்நிலையத்துக்கு 200 மீட்டர் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். குடிசையோடு பிஞ்சுக் குழந்தைகளை கொளுத்திய கொடூரமான சம்பவம் உன்னாவில் நடந்துள்ளது.

குறிவைக்கப்படும் தலித்துகள்!

உன்னாவில் பிப்ரவரி 2022 இல் ஆதிக்க சாதி கிரிமினல்கள், 11 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவருக்கு கடந்த செப்டம்பரில் குழந்தை பிறந்தது. காமவெறியர்கள் ஜாமீனில் வந்தவுடன், வழக்கை திரும்பப்பெறும்படி மிரட்டி, பெண்ணின் தந்தையை கோடாரியால் வெட்டியுள்ளனர். அதன் பின்னரும் வெறி அடங்காமல் குடும்பமாக சென்று அச்சிறுமியையும்,அவரது மகள் மற்றும் சமீபத்தில் பிறந்த அவரது சகோதரி உள்ளிட்ட இரு குழந்தைகளையும் குடிசையில் வைத்தே கொளுத்தியுள்ளனர். இந்த காட்டுமிராண்டி  தாக்குதலிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் 40 – 50% தீக்காயத்துடன் மருத்துவ மனையில் உள்ளனர்.

உங்களை கொல்ல, வன்புணர்வு செய்ய நியாயமான காரணம் அவசியமா? ராமராஜ்ஜியத்தில் அவசியமில்லை. பெண்களும் சிறுமிகளும் அறைகுறையாக மாடெர்னாக உடுத்தவெல்லாம் தேவையில்லை; ஆண்கள், காவிகளுடன் முன்விரோதமே வளர்த்திருக்க அவசியமில்லை. பிறப்பால் தாழ்த்தப்பட்டவராகவோ, மதத்தால் இஸ்லாமியராகவோ இருந்தாலே போதும்; நீங்கள் காவிகளின் தாக்குதல் இலக்குதான். இதைத்தான் இன்று வட மாநிலத்தில் சங்கிகளின் ஆட்சியில் ’சிறப்பாக’ செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: 
ஹிந்து மதவெறிக்கு யோகி ஆதித்யநாத் ஒரு வகைமாதிரி !
 மனுதர்மத்தின் ஆட்சியும், பாலியல் கொலை குற்றவாளிகள் விடுதலையும்!

RSS கூட்டத்தால் எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் வல்லுறவு, படுகொலைகள் செய்யும் அளவு ஒவ்வொருதலைமுறையும் இந்துமதவெறி, ஆதிக்க சாதிவெறி விசமேற்றப்படுகிறது. அப்படி செய்தால் காவிகளின் குடை அமைப்பில் பதவி, பொறுப்பு கிடைக்கிறது. மேலும் அடியாளாக எதையும் செய்யும் வகையில் தொழில்முறை கிரிமினல்களாக வளரவும் அரசே துணைநிற்கிறது. எனவே தான் போலீசு முன்பும், காவல்நிலையத்தின் முன்பும் பட்டப்பகலில் சுடுகிறார்கள். ஜாமீனில் வெளியே வந்தபோதும், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது,தைரியமாக வீட்டை கொளுத்துகிறார்கள். துணைக்கு அரசும் விடியும்முன் புல்டோசருடன் வருகிறது.

இந்துராஷ்டிரம் வேண்டுமா? உபிதான் மாடல்!

யோகியின் ஆட்சியில் முஸ்லீம்களும், தலித்துகளும் வேட்டையாடப்படும் இரையாகவும், ஆதிக்க சாதி வெறியர்கள் காம வெறி பிடித்த வேட்டை நாய்களாகவும் திட்டமிட்டே வளர்த்தெடுக்கப்படுகின்றனர். அயோத்தியை வைத்து ராமராஜ்ஜியத்தின், இந்துராஷ்டிரத்தின் முன்னுதாரணமாக உபி வளர்த்தெடுக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சியில் முன்னேறாமல் யோகி ராஜ்ஜியம் ”அசுர” ஆட்சி நடக்கும் பிற மாநிலங்களைவிட பின்தங்கியே உள்ளது. கிணற்றுத் தவளையாக மக்களை மாற்றி கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவுகள், கும்பல் படுகொலைகள் என செய்யவிட்டு கட்சியை வளர்க்கிறது காவிக்கும்பல்.

காவிகள் வெட்டி பராமரிக்கும் கிணற்றை விட்டு வெளியேறி, வேலைதேடி தமிழகம் வருபர்களுக்கு இங்குள்ள வளர்ச்சி பிரமிப்பை தந்தாலும், அதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியாதபடி சிலர் காவி வெறியேறியவர்களாகவோ,  அல்லது பலர் அச்சத்தில் உறைந்து உயிர் பிழைத்தால் போதுமென அடிமைகளாகவோ  மாறிவிட்டுள்ளனர். இரு தரப்புமே நம்முடன் ஒட்டாமல் ஒதுங்குகின்றனர்.

உபியில் ஆட்டம் போட்ட மன்மதராசாக்கள் தமிழகம் வந்தாலும் அடங்குவதில்லை. இங்கும் வல்லுறவு படுகொலைகளை செய்து தப்புகின்றனர். இது மொத்த வட மாநிலத்தவரையும் குற்றவாளியாக பார்க்கவும், தாக்கவும் தூண்டுகோலாகிறது. நாம் ”ஆண்ட பரம்பரையை” சரியாக இனம்கண்டு  வேப்பிலை அடிக்க வேண்டும்.

கொடுமைகள் முடிவுக்கு வருமா?

கிரிமினல்களாக சிறுவர்களை வளர்த்தெடுக்கும் கட்சியும், அதன் ஆட்சியும் உபியிலிருந்து துடைத்தெறியப்படாமல் அம்மக்களுக்கு விடிவு இல்லை. இவர்களை சட்டம் போட்டு தடுக்க முடியாது; காவி பாசிசத்தை களத்தில் மோதித்தான் வீழ்த்த முடியும். உபியை மீட்க யோகியையும், இந்தியாவை காக்க மோடி- அமித்ஷாவையும், இவர்களை உருவாக்கி வழிநடத்தி வரும் RSS யையும் விரட்டியடிக்காமல் பாலியல் வல்லுறவுகளும், படுகொலைகளும் முடிவுக்கு வராது.

இளமாறன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here