குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் !
தீண்டாமையுடன் சாதி ஒழிப்பையும் சட்டமாக்கு!
குடிநீரில் மனித கழிவு , இரட்டை குவளை!
கருவறை தீண்டாமை, தனி சுடுகாடு, பெண் அடிமைத்தனம்! ஆகியவற்றை பாதுகாக்கும் பார்ப்பனிய சனாதன நச்சு மரத்தை வேருடன் சாய்ப்போம் !
என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் மரக்கடை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகில் 10.01.23 இன்று காலை 11 மணியளவில் மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கார்க்கி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கை வயல் இறையூர் கிராமத்தில் அரங்கேற்றிய சாதி வெறியின் பயங்கரவாதத்தை கண்டிக்கும் விதமாக எழுச்சி மிகுந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கண்டன உரையாற்ற வருகை தந்த ஜனநாயக முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த தோழர்களை திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் செழியன் வரவேற்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் தமிழாதன் , பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஐயா சின்னதுரை மாவட்டத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம். தோழர் ஜீவா – மாவட்ட செயலாளர் மக்கள் கலை இலக்கிய கழகம், தோழர் காளியப்பன் மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம், தோழர் ராஜ்குமார் புறநகர் மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தோழர் முபாரக் மாவட்ட தலைவர் SDPI கட்சி. தோழர் சம்சுதீன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு. தோழர் ரவிக்குமார் மாவட்ட தலைவர், சமூக நீதிப் பேரவை. தோழர் செல்வராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு தோழர் லதா பாடல் பாடினார். மேலும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணலி தாஸ், அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கம் தோழர் சைனி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர். ஆதிநாரயணன், திராவிடர் விடுதலை கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன் , மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட தலைவர் தோழர் காசிம் … முன்னிலை வகித்தனர்.
இறுதியாக திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் நன்றி கூறினார். எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்துகொண்டனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி மாவட்டம்.
போன். 94454-75157.
கோவை
கோவையில் 7 ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவடி
09 ஆம் தேதி ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை 05மணியளவில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் தேரடித்திடலில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவிட்ட கயவர்களை வன்கொடும்மை சட்டத்தில் கைதுசெய்யக்க்கோரி ஆர்ப்பாடம் நடபெற்றது, இதில் புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் அம்பேத்கார் கூட்டமைப்பின் தோழர் செல்வராஜ் வி சி க நகரச்செயலாளர் தோழர் வெற்றி மற்றும் சி பி ஐ எம் மாவட்டக்குழு தோழர் திருநாவுக்கரசு ஆகியோருடன் மக்கள் அதிகாரம் மாநில செயர்குழு உறுப்பினர் தோழர் கோ.நாகராசன் சிறப்புரையாற்றினார் மாவட்டப்பொருளார் தோழர் கல்யாணக்குமார் நன்றியுரையுடன் நிகழ்ச்சிமுடிவுற்றது திரளான மக்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம்