மே 17
தமிழகமே!
ஒன்றிய அதிகார குவிப்பைத் தடுத்திடு!
மாநில தன்னாட்சிக்குப் போரிடு!
என்ற முழக்கத்தின் அடிப்படையில் இன்று மே 17 மதியம் 2 மணிக்கு கருத்தரங்கமும், மாலை 5 மணிக்கு மாநாடும் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேலைகளில் கடந்த 3 மாதங்களாக தோழர்கள் இடைவிடாத மக்கள் பிரச்சாரமும் அதையொட்டிய தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேராக களத்திலும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
இன்று மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகளில் நேற்று இரவிலிருந்து செய்து வருகிறார்கள். தற்போது சென்னை காமராஜர் அரங்கானது கருத்தரங்கம் – மாநாட்டிற்கு தயார் நிலையிலில் உள்ளது.