1.

னாதனம் ஒழிப்போம் ! ” என்று
புரிந்த அளவில் அமைச்சர்
சொன்னால் என்ன தப்பு ?
வெந்துபோன தமிழக உள்ளங்களில்
வேல்பாய்ச்சினால்
அமைச்சர் வழியாகவும்
குருதி பாயவே செய்யும்,
உனக்கென்ன கொதிப்பு?

பொருளே அறியாமல் நீ
சிவப்பும் வெள்ளையுமாய்
மூஞ்சியில் அப்பிக்கொண்ட
‘ திருமண்காப்பு ‘ சிரிப்பதுபோல வழிகிறது —
” கொண்டுவா தலையை! ”
என்ற உன் உதாரைப் பார்த்து.

நண்பர்களே,
கொண்டுவாருங்கள்
குழைத்துச்சிவந்த மண்ணும்,
அரைத்துவெளுத்த
சுண்ணச்சாந்தும் வைத்து
அந்த ராமச்சந்திரதாஸின்
வாயை மூடுவோம்!

இதையும் படியுங்கள்: தல(லை) புராணம்!

2.

பிற்போக்கில் பின்னேறிய
அயோத்தியிலிருந்து ‘மதத் தலைவனா’ம் —
ஒரு
ராமச்சந்திரதாஸ் பரமஹம்ஸ ஆச்சாரி
என்ற ஆள்
” வெட்டுவேன்டா ‘ என்று
வாளைக் காட்டுகிறான்!

வாய்க்குக் கீழே
சங்கை அறுப்பது எங்கள் உழைப்பு ! —
( எங்கள் நக்கீரனைக் கேட்டால் சொல்லுவார் )
உன்னைப்போல் உடல் வளர்க்கும்
காதகர்க்கு ஏதடா உழைப்பு, தொழில் ?

உன் புராணக்கதைகள் என்ன ?
வித்தை கற்ற ஏகலைவன் கட்டைவிரலை
வெட்டினான் ஒரு துரோணாச்சாரி ;
தீமூட்டித் தலைகீழாய்த் திக்கற்றுத் தொங்கித்
தவங்கிடந்த சம்பூகனின் தலையை
வெட்டினான் ‘ அவதாரம் ‘ ராமன்.
‘ பாரதத்தின் ‘ சொத்துத் தகராறில்
பதினெட்டுநாள் பெரும் போரே மூண்டு–
அரவானைக் களப்பலியில்
வெட்டினான் வஞ்சகன் கிஷ்ணன்…….
இப்படி உன் பழைய தர்மக் கதைகள்,
‘சனாதன’ப் பழங்கந்தல் கதைகள்கேட்கும்போதே
காதில் ரத்தம் வழியுதடா,
போதும் போதும்
வாதுக்கு வராதே நில் !

நண்பர்களே,
எதிரியை அழிக்கும் அறைகூவலின்போதே,
அவர்களது ஆர்எஸ்எஸ்ஸின் ‘ இந்துத்துவா ‘ என்ற ‘ நாகரீக ‘ அழைப்பின் பின்னாலும்,
அவர்களது ஆர்எஸ்எஸ் பிராண்ட்
கவர்னரின் ‘ சனாதானம் ‘ என்ற ‘ நாகரீக ‘
உச்சாடனத்தின் பின்னும்தான் போவணுமா ?
நெஞ்சை நிமிர்த்தி
” பார்ப்பன இந்துமதவெறிப்
பாசிசம் ஒழிப்போம்! ” என்று
மொழிவது குற்றமோ ?
சொல்லுங்கள் நண்பர்களே !!

புதிய திருமூலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here