RSS துணை அமைப்புகளை மட்டுமே அது சேவை நிறுவனங்களாக பார்க்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.!

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பேசி சித்தரிக்கவும் , இந்திய முஸ்லிம்கள், உலக முஸ்லிம் பயங்கர வாதிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பதாக, குறும்படங்கள் தயாரித்து, திரையிட்டு நிதி திரட்டுவதை அமெரிக்க RSS சான HSS சும், IDRFம் சேர்ந்து செய்து வருகின்றன.! வளர்ச்சி, புனர்வாழ்வு என்று கூறி இந்தியாவுக்கு IDRF அனுப்பிய தொகையில் பெரும்பகுதி, சங் பரிவாரின் திட்டங்களை அமல் படுத்துவதற்கும் மதப் பகைமையை வளர்ப்பதற்குமே பயன் பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன..! 1994 முதல் 2000 வரை IDRF இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75% (3.2 மில்லியன் டாலர்), RSS ஆதரவு அமைப்புகளுக்கே அனுப்பப் பட்டுள்ளது.!

எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புக்கும் உதவி செய்யவில்லை. அனுப்பிய தொகையில் 70% ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப் பட்டது. 8% மருத்துவ வசதிக்கும், 15% புனர்வாழ்வு திட்டங்களுக்கும், 4% கிராம வளர்ச்சிக்கும் செலவிடப் பட்டது. (ஆதாரம்: – IDRF ஆண்டு அறிக்கை – இணைய தளம்) “புனர்வாழ்வுப் பணி” என்ற பெயரில் செலவிடப் பட்ட தொகையும் மத அடிப்படையிலேயே செலவிடப் பட்டது. குஜராத் பூகம்பத்தில் புனர்வாழ்வு நிதியிலிருந்து செலவிட்ட தொகையை, பாதிக்கப் பட்ட இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கினார்கள். இதேபோல் மதக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட வங்க தேச இந்துக்கள், ராணுவம் மற்றும் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளான காஷ்மீர் இந்துக்கள் என்று இந்துக்களுக்கு மட்டுமே, நிறுவனம் உதவிகளைச் செய்துள்ளது. இவற்றில் பாதிக்கப் பட்டோர் கிறித்தவர், முஸ்லிம்கள் இருந்தாலும் கூட நிவாரண உதவிகள் மத அடிப்படையிலேயே செய்யப் பட்டன.!

குஜராத் பூகம்பத்தில் RSS, சங்பரிவாரங்கள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகுதியைப் புறக்கணித்தன என்று குல்தீப் நய்யார் எழுதினார். (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பிப்.21, 2001) இதர தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பணியில் ஈடுபட வந்தபோது, சங்பரிவார் அமைப்புகள் அவற்றைத் தடுத்து நிறுத்தி விட்டன. (கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஜன.31, 2001) இந்தியப் பழங்குடி மக்களை ஆதிவாசிகள் என்ற பெயரில் தான் அழைப்பது வழக்கம்.! ஆனால், இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள் தான் என்று வரலாற்றைப் புரட்ட விரும்பும் சங்கிகள் இவர்களை ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிகள் என்று அழைப்பதில்லை. மாறாக ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியின ஆதிவாசிகள், இயற்கையை வழிபடக் கூடியவர்கள். அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்து சாதி அமைப்பால் கடந்த நூற்றாண்டில் பாதிக்கப்பட்டவர்கள்.!

இவர்கள் மீது மதங்கள் திணிக்கப் பட்டன. பலர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அண்மைக் காலமாக, இந்த மக்களை ‘இந்துக்களாக’ மாற்றும் முயற்சிகளில் சங் பரிவார் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழங்குடி மக்களுக்கான கல்வித் திட்டங்கள், நல் வாழ்வுத் திட்டங்களை அமல் படுத்தி வருகிறது. இதற்கான பெரும் நிதி IRDF போன்ற அமெரிக்க அமைப்பினால் பெறப்படுகிறது.! பழங்குடியினரை இந்து மதமாற்றம் செய்வதற்கே அமெரிக்காவின் பணம் IDRF வழியாகப் பயன்படுத்தப் பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன. ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக IDRF ஒப்புக் கொண்டு உள்ளதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம்.“கிறிஸ்தவர்களாக மாற்றப் பட்ட வனவாசிகளை இந்து மதத்துக்கு மாற்றவே வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் 1950 களில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த வழியில் பழங்குடியினரின் கிறிஸ்தவ நாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதில், எங்கள் அமைப்பு வெற்றிகளைக் குவித்து வருகிறது” – என்று RSS வெளியீடே எழுதியிருக்கிறது.

பழங்குடியினரை இந்துக்களாக்கி, தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து, சமூக விரோத, தேச விரோதிகளிடமிருந்து, அவர்களைக் காப்பாற்றி உள்ளதாக, ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்துக்கு’ IDRF நிறுவனமே, தனது ஆவணங்களில் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.! பழங்குடியினரை மதம் மாற்றுவதோடு மட்டுமல்ல, அவர்களை ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் போராளிப் பயிற்சியும் கொடுக்கிறார்கள். அதற்கும் அமெரிக்காவின் பணம் வருகிறது.! அமெரிக்காவின் IDRF லிருந்து நிதியுதவி பெறும் ‘சேவா பாரதி’ தனது அறிக்கை ஒன்றில் இதை உறுதிப் படுத்துகிறது.! பழங்குடியினரில் சில ஆண்களையும், பெண்களையும் அயோத்தியில் உள்ள ‘ஸ்ரீராமகதா பிராவச்சான்’ என்ற ராமாயணப் பயிற்சிக்கு அனுப்பி சாமியார்களைக் கொண்டு 8 மாத பயிற்சி தந்து, பிறகு அவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பி பிரச்சாரகர்களாகப் பயன் படுத்துவதாக சேவா பாரதி கூறுகிறது.!

இது மட்டுமா.?ஆதிவாசிகளை, இந்துக்களாக மதம் மாற்றும் நிகழ்ச்சி, பாஜக வின் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுகிறது என்று, சங்பரிவார் தலைவர்களே கூறுகிறார்கள்.! பழங்குடியினர் வாழும் பகுதிகளில் – “ஏகல் வித்யாலயா” என்ற பள்ளிகள், அமெரிக்க IDRF நிதி உதவியோடு நடத்தப் படுகின்றன. பழங்குடியினரை இந்துவாக மாற்றுவதில் இப்பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. இத்தகைய பள்ளிகளைத் தொடங்கியதன் மூலமே, பீகாருக்குள் தாங்கள் வலிமை பெற முடிந்தது என்றும், பீகாரில் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தேர்தலில் பாஜக வுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியது என்றும், குஜராத்திலும் அதே சோதனைகளைத் துவங்கி காங்கிரஸ் கோட்டைகளைத் தகர்ப்போம் என்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் கவுஷிக் பட்டேல் கூறியிருக்கிறார். (ஆதாரம்: ‘தி டெலிகிராப்’ நாளேடு, ஜூலை 4, 2000) ஆக, அமெரிக்கப் பணம், மதமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பாஜக வை ஆட்சியில் அமர்த்தவும் பயன் படுத்தப் படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.!

IDRF லிருந்து சங் பரிவார்களுக்கு வரும் பணம், இந்தியாவில் மதக் கலவரங்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.! சுருக்கம் கருதி, அமெரிக்க நிதி உதவியோடு செயல்படும் அமைப்புகள் தந்துள்ள ஒரு சில ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் சுட்டிக் காட்டலாம். மேற்கு குஜராத்தில் வாகை எனுமிடத்தில் அமெரிக்க உதவியோடு ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ நடத்தும் பள்ளியில் சிவாஜியின் படத்துக்குக் கீழே, “சிவாஜி மட்டும் இல்லா விட்டால் நாம் ‘சுன்னத்’ செய்யப் பட்டிருப்போம். சிவாஜி தான், நம்மைக் கட்டாய மதமாற்றத்தில் இருந்து காப்பாற்றினார்” என்று எழுதப் பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் முதல் தலை முறையினரான அந்த மாணவர்கள் இப்போது ‘இந்து’க்களாக மாற்றப் பட்டனர். ஒரு இளம் RSS காரர் அப்பள்ளியை நடத்துகிறார். கலவரத்துக்கான வெறியை இதன் மூலம் தூண்டி விடுகிறார்கள் என்று, பள்ளியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய வரலாற்று ஆய்வாளர் அஜய்சிங் எழுதி இருக்கிறார். (ஆசியா வீக், மார்ச் 26, 1999)

அமெரிக்க உதவி பெறும் வனவாசி கல்யாண் பரிஷத்தை நடத்தும் சுவாமி அசீமானந்த் என்பவர் ஒரு ஆதிவாசி கூட கிறிஸ்தவராக இருக்கக் கூடாது என்று கூறி, அனைவரையும் இந்துக்களாக்கும் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் செய்தியாளர் அருண் வர்கீஸ் அம்பலப் படுத்தினார். (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பிப்.11, 1999) மத்தியப் பிரதேச மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் நிறுவனத்தால், கிறிஸ்தவ ஆதிவாசிகள் தாக்கப் படுவதை, மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் பட்டதை, பாதிக்கப் பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியதை எல்லாம் ஒரு டாக்குமென்டரி படமே அம்பலப் படுத்தியது. (Fishers of Men, Docementary by Ranjankanth and Padmavathy Rao, 1997) அமெரிக்க வாழ் இந்தியரின் உதவியோடு, இந்தியாவில் கலவரங்களும் வெறுப்புகளும் தூண்டிவிடப் பட்டதற்கு இவை சில உதாரணங்கள்.! அவர்களின் உதவியோடு நடத்தப்படும் நிறுவனமான வித்யாபாரதி நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டங்களில் வரலாறு திருத்தப்பட்டு, இந்து மதவாத உணர்வுகள் தூண்டி விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.!

இதையும் படியுங்கள்:  ஆர் எஸ் எஸ்;இன் நெஞ்சைக் கிழித்த அம்பு!

IDRF எனும் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 184..! மாநில வாரியாக நிதி பெறும் நிறுவனப் பெயர்களையும் நிதியையும், அதன் இணைய தளங்களில் காண முடிகிறது. இதில் தமிழ்நாட்டில் நிதியுதவி பெறும் நிறுவனங்களையும் பெற்றுள்ள தொகையையும் மட்டும் கீழே தருகிறோம் : —

🐔பாரத் கல்சுரல் டிரஸ்ட் – திருச்சி (45,980 டாலர் – மதத்துக்காக)

🐔கிராமகோயில் பூசாரிகள் பேரவை – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

🐔நவஜோதி சாரிட்டி டிரஸ்ட் – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

🐔சிவாலயா – சென்னை (6,650 டாலர் – மதம்-கல்வி)

🐔ஸ்ரீராம தனுஷ்கோடி அபய ஆஞ்சநேயர் சேவா டிரஸ்ட் (9,500 டாலர் – மதத்துக்காக)

🐔சுவாமி விவேகானந்தா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி (82,290 டாலர் – மதம்-கல்விக்காக)

🐔ஆயுர்வேதிக் டிரஸ்ட் (கோவை) – (2,410 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

🐔யுனிக் பவுண்டேன் டிரஸ்ட் (திருவண்ணாமலை) – (9,035 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

🐔வெர்சல் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை) – (17,500 டாலர்)

🐔விவேகானந்தா கேந்திரா ராக் மெமோரியல் (கன்னியாகுமரி) – (74,885 டாலர் – மதம் – சமூக கல்விக்காக)

🐔ஆரோவில் – ஆரோவில் லேண்ட் பன்ட் – 301,420 டாலர்

🐔அர்பிந்தோ ஆக்ஷன் – 4,750 டாலர்

🐔ஆர்டார்தோ ஆஸ்ரம் – 2,500 டாலர்

🐔அமெரிக்காவின் IDRF வழங்கியுள்ள மொத்த நிதியில்

🐔82.4 சதவீதம் (2,684,915 டாலர்) சங் பரிவார் அமைப்புகளுக்கும்,

🐔8.1.சதவீதம் (2,64,660 டாலர்) மத நடவடிக்கை களுக்கும்,

🐔2.2 சதவீதம் (70,620 டாலர்) மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும்,

நன்றி

கரூர் தமிழ் கவி.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here