கார்ப்பரேட்- காவிகளின் பிடியில் ஊடகங்கள்!
மாற்றாக சுதந்திர ஊடகத்தை உருவாக்குவோம்!


அன்பார்ந்த வாசகர்களே!

இந்தியாவில் பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பத்திரிக்கைச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று ஒன்றும் கிடையாது.

ஏற்கனவே தரகுமுதலாளிகள், கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு முதலாளிகள், அரசியல் கட்சிகள், சாதி, மதவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஊடகங்கள் நடுநிலை என்ற பெயரில் தங்களுக்கு சாதகமான செய்திகளையே பரப்பி வருகின்றனர்.

சமூக ஊடகங்கள் என்று அழைக்கப்படுகின்ற வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்தும் ஏகாதிபத்திய நிதி மூலதன கார்ப்பரேட்டுகளால் கையாளப்படுகிறது. இவை ஒன்றும் சுதந்திரமான ஊடகங்கள் கிடையாது.

இணையத்தளங்கள் (website), பிளாக் ஸ்பாட்டுகள் (Blog spot) போன்றவை இயங்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள சர்வர்களையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இவை எதுவும் ஜனநாயக உணர்வுடன் செயல்படுகின்ற நிறுவனங்கள் கிடையாது.

இத்தகைய சூழலில்தான் அரசுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் இயக்கங்கள் சமூக ஊடகங்களில் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதுபோல தான் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்கள் அனைத்தும் செயல்படுகின்றன என்பதை தங்களுக்கு அறியத் தருகிறோம்.

“நடுநிலை” என்ற பெயரில் பண மூட்டைகளுக்கும், பதவியில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஜால்ரா போடுகின்ற வேலையில் இறங்கி செயல்பட எப்போதும் மக்கள் அதிகாரம் தயாரில்லை.

அதுபோல வாசகர்களின் பொது புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல், சினிமா கிசுகிசுக்கள், எந்த பிரச்சனையையும் நுனிப்புல் மேய்கின்ற வகையில் பார்க்கின்ற கண்ணோட்டம் இவற்றை ஊடறுத்து பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை பிரச்சனையை புரிந்து கொள்கின்ற நேர்மையான அணுகுமுறையை, சுருக்கமாக சொன்னால் வர்க்கப் பார்வையை உருவாக்குவதே எமது நோக்கமாக உள்ளது.

பெரும் பணபலமோ, ஊடகம் என்று செல்வதற்கு உரிய அடிப்படை கட்டுமான வசதிகளோ இல்லாமல் அன்றாடம் உழைப்பில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களைக் கொண்டு இயங்குகின்ற மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் முகநூல் பக்கங்கள் தங்களிடம் கோருவது ஒன்றுதான், அது எமது செய்திகளை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உதவுங்கள்.

நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உடன் பணிபுரிபவர்கள் அனைவரிடமும் மக்கள் அதிகாரம் ஊடகத்தைப் பற்றிய செய்திகளை எடுத்துச் சொல்லுங்கள், அவர்களையும் ஆதரிக்க கோருங்கள் என்பதே எமது வேண்டுகோள்.

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

 

FACEBOOK :

https://www.facebook.com/peoples.powerTN

YOUTUBE

https://www.youtube.com/channel/UCR1v0DCZwMniQseXpjEidJA

INSTAGRAM:

https://instagram.com/makkalathikaram_media?utm_medium=copy_link

TWITTER :

https://twitter.com/peoplespowerTN?t=1w9i81Q_6IhdHmO1Hvl2IA&s=09

NEWSHUNT :

https://profile.dailyhunt.in/peoplespower2021?s=a&ss=pd&uu=0x41ac947b68027e36

SHARE CHAT

https://sharechat.com/profile/peoplespower?d=n

PINTEREST

https://pin.it/6mSrCWK

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here