சார் தாம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக உத்தர்காண்ட் மாநிலத்தில் சுரங்க பணி நடைபெற்ற போது சுரங்கம் இடையில் மண் சரிந்து 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இவர்களை மீட்பது குறித்து ஏதும் பேசாத பிரதமர் மோடி அந்நேரத்தில் இந்தியாவில் நடைப்பெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பு பார்வையாளராக கலந்துக் கொண்டு தன்னை விளம்பரப் படுத்திக் கொண்டார்.
கிட்டத்தட்ட 10 நாட்களை கடந்தும் தொழிலாளர்கள் மீட்கப்படாதது குறித்து பாசிஸ்டுகளுக்கு சிறிதும் கவலையில்லை. கிரிக்கெட் அளவுக்கு உழைக்கும் வர்க்கம் பற்றி வாய்த் திறக்க தயாரில்லை. கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு சொல்லப்படும் ஆறுதல் கூட சுரங்கத்தில் மாட்டிக் கொண்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சொல்லப்படவில்லை.
தொழிலாளர்கள் தானே… என்ற திமிர்.
இதனை அம்பலப்படுத்தியும் இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் மக்கள் அதிகாரத்தில் மாநில துணைச் செயலாளர் தோழர் மூர்த்தி பேசியுள்ளார்.
பருங்கள்… பகிருங்கள்…
LINK: மக்கள் அதிகாரம் YOUTUBE