இந்தியா மற்றும் இலங்கையில் வைதீக மதம் தோன்றுவதற்கு முன்னால் நிலவிய அவைதீக மதங்களின் முக்கியமான ஒன்று ஆசீவகம்.
சமணம், பௌத்தம் ஆகியவை தோன்றுவதற்கு முன்பாகவே இந்தியா மற்றும் இலங்கையில் மக்களின் வாழ்வியல் நெறியாகவும், உயர்ந்த சிந்தனை மரபாகவும் விளங்கியது ஆசீவகம்.
இந்திய தத்துவ மரபு பார்ப்பன (இந்து) மத மரபல்ல! பிறருக்குத் தீங்கு தராமல் தன்னைத்தானே வருத்திக்கொண்டு வாழ்ந்து, பிறருக்கு உதவிய உயர்ந்த சிந்தனை மரபை கொண்ட மக்களை பின்னால் வந்த ஆரிய-பார்ப்பனர்கள் செரிக்கப் பார்த்துள்ளனர்.
குறிப்பாக, தமிழர்களின் நாகரீக தொன்மையை உலகிற்கு நிரூபித்து வரும் கீழடி மற்றும் பொருநை நாகரீகம் ஆசீவகத்தின் சாயலுடன் விளங்குவதை தொடர்ந்து ஆராய்ந்து வரும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.
வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து எழுதத் துவங்கும்போது பேராசிரியர்
க. நெடுஞ்செழியன் எழுத்துக்கள் என்றும் நமக்கு துணை நிற்கும்.
ஆதன் தமிழ் என்ற இணையத்திற்கு அவர் அளித்த நேர்காணல் இத்துடன் இணைத்துள்ளோம்.
பாருங்கள்!
பகிருங்கள்!
உண்மை வரலாற்றை நிலைநாட்டுவோம்!