கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தை ஒட்டி உயர்நீதிமன்றம் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்ற வகையில் பாசிச முறையில் youtube சேனல்களை பற்றி வழிகாட்டி இருக்கிறது.
போலீஸ் விசாரணை முடிவதற்கு முன்பே அனைத்திற்கும் மேலான நீதிபதியாக தன்னை தானே நியமித்துக் கொள்ளும் உயர் நீதிமன்ற ‘நீதி அரசர்கள்’ மனசாட்சிக்கு விரோதமாகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் நீதி வழங்கி ஆளும் வர்க்க சேவையில் குதித்து வருகின்றனர்.
“இணை விசாரணை” கூடாது என்று புலனாய்வு இதழியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் மாற்று கருத்துக்களுக்கு கல்லறை கட்டும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நிற்போம்.
Youtube சேனல்களுடன் இணைந்து ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுப்போம்.
ஆசிரியர் குழு,
ஊடகம்,
மக்கள் அதிகாரம்.









