உக்ரைன் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது ரசிய ஏகாதிபத்தியம்.
உலகம் முழுவதும் இந்த போருக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்களும், கண்டன பேரணிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
ரஷ்யக் கரடியின் உண்மை முகம் கோரமாக பல்லைக் கடித்துக் கொண்டு வெளியில் தெரிகிறது.
ஆனாலும் அமெரிக்கா – நேட்டோ பிரச்சனைகளை ஒட்டி பிரதானமாக விமர்சனத்தை அமெரிக்காவின் மீது தொடுத்து வருகிறார்கள் சிலர்.
உலகை தனது ஒற்றைத் துருவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தொடர்ச்சியாகவும், மூர்க்கத்தனமாகவும் முயற்சி செய்து வருகிறது அமெரிக்கா.
“ரஷ்யாவே உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்து!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொழிலாளர்கள் மத்தியில் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், ஊடகப் பிரிவு செயலாளர் தோழர் சுதேஷ் குமார் ஆற்றிய உரை.