அவசரம்!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் காவிரிப்படுகை உள்ளிட்டு 7 மாவட்டங்களில், 14 வட்டங்களில், 77 ஊர்களில், ஏராளமான விவசாயிகளின் வயல்களில் எண்ணெய் எரிவாயுக் குழாய்களைப் புதைக்க இருக்கிறது.

அதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் நில உரிமை மாற்றம் உள்ளவர்கள் மட்டும் தெரிவிக்கலாம் என்று கூறுகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கவில்லை.

ஆனால் குறிப்பிட்ட ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளுக்கு 3(1) அறிவிப்பை வழங்குவதாகக் கூறி இருக்கிறது. உடனடியாக விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களிடம் தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டுகிறோம்.

தேவைப்படின் எங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். இந்த இரண்டு பக்கத் துண்டறிக்கையை கவனமாகப் படிக்கவும், உடனடியாக செயல்படவும்.

பேராசிரியர் த. செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here