மிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)-ன் அவசர பொதுக்குழு கூட்டம் இன்று 29.06.2024 தேதி, காலை 10.30 மணிக்கு தொடங்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது அதில் தலைவ‌ர் திரு. P.நந்தகுமார் அவர்கள் தலைமையிலும், செயலாளர் திரு.K.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு. D.ரவி மற்றும் பெரும் திரளாக கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் முன்னிலையில் IPC, Cr.PC, IEA ஆகிய சட்டங்களை புதியதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள BNS, BNSS, BS அகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுதல் தொடர்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:

1.( i). JAAC பொதுக்குழுவில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் கடந்த 11.08.2023 அன்று மசோதாக்களை தாக்கல் செய்து தற்போது நடைமுறையில் உள்ள 1.இந்திய தண்டனைச் சட்டம்(IPC), 2.குற்றவியல் நடைமுறைச் சட்டம்(CrPC), மற்றும் 3.இந்திய சாட்சிய சட்டம்(IEA) ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றி அமைத்து, வடமொழி தலைப்புகளில்

1.பாரதிய நியாய ஷன்ஹிதா (BNS) 2023,
2.பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா (BNSS) 2023 ,
3.பாரதிய சக்ஷய அதிநயம் (BS) 2023

என மாற்றியமைத்து சட்டமாக்கப்பட்டுவிட்டது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348ற்கு எதிரான நடவடிக்கை ஆகும். இதனை உடனடியாக நிறுத்தி வைத்தும், முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்று இந்த கூட்டுக் குழுவின் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துவது என்றும்,

(ii) புதிய BNS, BNSS, BS சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும், சட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் தினமான 01.07.2024-ஐ கருப்பு தினமாக அனுசரித்து, 01.07.2024 முதல் 08.07.2024 வரை மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருப்பது என்றும்,

(iii) 01.07.2024 அன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்கள் நீதிமன்ற வாயில் முன்பு புதிய சட்டங்களை திரும்ப பெற உண்ணாவிரதப் போராட்டம் செய்வதென்றும்,

(iv). 02.07.2024 அன்று அந்தந்த வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்கள் நீதிமன்ற வாயில் முன்பு புதிய சட்டங்களை திரும்ப பெற ஆர்ப்பாட்டம் செய்வது என்றும்,

(v) 03.07.2024 அன்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் தங்கள் ஊரில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயில் முன்பு புதிய சட்டங்களை திரும்ப பெற கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்வது என்றும்,

(vi). 08.07.2024 அ‌ன்று புதிய சட்டங்களை முழுமையாக திரும்ப பெற கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக மாநிலத்தின் மத்திய பகுதியான திருச்சியில் மாபெரும் பேரணி நடத்துவது என்றும் அன்றைய தினம், நமது வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற பணியிலிருந்து விலகி திருச்சியில் நடக்கவிருக்கும் மாபெரும் பேரணியில் கலந்து கொண்டு நமது வழக்கறிஞர்கள் ஒற்றுமையை ஓங்க செய்ய வேண்டும் என்றும், நமது வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிரவாகிகள் மற்றும் JAAC நிர்வாகிகள் அனைவரும் வழக்கறிஞர் சீருடையில் கலந்துக் கொண்டு பேரணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

(vii) 08.07.2024 அன்று திருச்சியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும்,

படிக்க:

 மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள்: சட்டபூர்வமாக பாசிசத்தை அரங்கேற்ற முயலும் மோடி அரசு!

 குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) சட்டம்!

2.(i)புதிய சட்டங்களை முழுமையாக திரும்ப பெற கோரி மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு பிரதமர், மாண்புமிகு மத்திய சட்ட அமைச்சர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாண்புமிகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாண்புமிகு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் ஆகியோர்களுக்கு வடமொழியில் பெயர் உள்ள புதிய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைக்கவும் மற்றும் திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் என்று JAAC கூட்டுக் குழுவின் மூலம் கோரிக்கை மனுவை (Memorandum) அனுப்புவது என்றும்,

3. புதிய BNS, BNSS, BS-2023 சட்டங்களை நடைமுறை படுத்துவதை எதிர்த்து 01.07.2024 அன்றினை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் செய்து வருகின்ற மேற்கு வங்க பார் கவுன்சிலுக்கு JAAC அமைப்பு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

4.புதிய BNS, BNSS, BS சட்டத்தை எதிர்த்து JAAC நடத்தும் மாநிலம் தழுவிய அளவில் நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருப்பது என்ற போராட்டதிற்கும், மற்றப் போராட்டதிற்கும் தமிழக பார் கவுன்சில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்கள் மற்றும் Federation ஆகிய அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி JAAC பொதுக்குழு வே‌ண்டுகோ‌ள் வைத்து கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நமது பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

P.நந்தகுமார், தலைவர்.
K.பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர்.
D.ரவி, பொருளாளர்.
(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு-JAAC).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here