விவசாயிகள் விடுதலை முன்னணி கடந்த ஆகஸ்ட் 13 அன்று தஞ்சையில் உழவர் உரிமை வென்றிடு! காவி பாசிசத்தை வீழ்த்திடு தலைப்பில் மாநாடு நடத்தி முடித்துள்ளது.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளார்கள். குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கையை அனைவரும் பேசியது முக்கியமானது.
மாநாடு மட்டுமல்லாமல் விவசாயிகள் கலந்துக் கொண்ட பேரணியும் நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரகணக்கானோர் கலந்துக் கொண்டனர். இது குறித்து பல்வேறு செய்திதாள்களில் செய்திகளாக வெளிவந்துள்ளது.
The New Indian Express
தினகரன்
இந்து தமிழ் திசை
தினத்தந்தி
தினமணி
காவிரி டெல்டா