இந்திய தத்துவ மரபு இந்து மரபு இல்லை! பாகம் 7-ன்

நேற்றைய தொடர்ச்சி…

அவர்கள் பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொண்டதே அந்தப் பகுதியில் அமிழ்ந்து போன அந்த தமிழகத்துக்குரிய அந்த ஞானிதான் கபிலர். கவனியுங்கள், இதில் ஒரு பெரிய வேடிக்கை நடந்தது. சாங்கியம் என்று அதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். எண்ணம் என்ற பொருள் அதற்கு. எண்ணம் என்பது எண்ணுதல் என்பது நினைத்தல் என்று பொருள் அதற்கு. மனம் சார்ந்த விசயம் அது. இதை வடமொழியில் மொழிபெயர்த்தவன் பார்த்து எழுதியவன், தவறா எழுதிக்கிட்டு போய் எண்ணுதல் என்பதை அவன் எப்படி டிரான்ஸ்லேட் பண்ணான்னா, எண்ணுதல் 1,2,3,4,… ன்னு டிரான்ஸ்லேசன் பண்ணிவிட்டான். சாங்கியன்னா, கவனியுங்கள், கொஞ்சம் கடினமான விசயம், சொல்ல முயற்சிக்கிறேன்.

நான் அதை எண்ணுகிறேன். இதை எண்ணுகிறேன், தோழர் மருதையன் ஒன்றை எண்ணுகிறார். நான் ஒன்றை எண்ணுகிறேன். அய்யா ஒன்றை எண்ணுகிறார், நீங்கள் ஒன்றை எண்ணுகிறீர்கள், நினைக்கிறோம் என்று ஒன்று இருக்கிறதே, அதுவும் எண்ணுதல் என்று தமிழில் இருக்கிறது. எண்ணம் 1,2,3,4,…ன்னு எண்றது எண்ணுதல், அது இந்த எண்ணுதல் என்கிற நினைத்தலை எண்ணுதல் இணிதணtடிணஞ்ன்னு மொழி பெயர்த்துக்கிட்டு போயி, சாங்க்யான்னு பேர் வச்சு கபிலான்னு எழுதிக்கிட்டான். இவரு பேரு கபிலா, “”க” இந்த பெரிய “”பி” சான்ஸ்கிரிட் ல அவன் “”பி” போட்டு கபிலான்னு எழுதியிருக்கிறான். ஏன்னா நம்ம ஆளுன்னு தெரியக்கூடாதுன்றதுக்கு. மயிலாடுதுறையை மாயவரம்ன்னு மாத்தினவனுக்கு இது சுலபம்தானே இந்த திருட்டு பசங்களுக்கு இந்த மயிலாடுதுறையிலேயே, மயில் ஆடுதுறைன்னு அழகா இருக்குது பெயரிலே இதைப் போயி மாயவரம்னு மாத்திட்டாங்க.

மாயவரம்னா என்னடான்னு கேட்டா, மயூரம்ன்னா மயில். அந்த மயிருக்கு மயில்ன்னே சொல்லிட்டுப் போறது. மயிலுன்னே சொல்லிட்டு போலாம்ல, இதப் போயி மயூரம்னு டிரான்ஸ்லேட் பண்ணுவாராம். எண்ணத்தை டிரான்ஸ்லேட் பண்ணி எண்ணுதல் என்றாச்சு, எண்ணுதலை இணிதணtடிணஞ்னு போட்டு சாங்க்யான்னு கடைசியில் இப்ப என்னான்றாங்க சாங்க்ய தத்துவம் என்பது இப்பொழுது மறைந்து போய்ட்டதுன்றான். அடப்பாவி! இப்போது மீண்டும் யாரும் தவறாக நினைக்கக்கூடாது, நம்மவர்க்கு இல்லை என்னுடைய சவால், உழைக்கும் வர்க்கத்துக்கு நான் சவால் கொடுக்கல. இந்து தத்துவ மரபு தேவை என்று சொல்கிற எவன் வந்தாலும், என்னுடைய சவால் சாங்கியம் உங்களுடைய இந்து தத்துவ மரபு இல்லை, இல்லை, இல்லை, அந்த சாங்கியம் முழுவதும் எங்கள் தத்துவ மரபு.

எங்க சகோதரன் தங்கர் பச்சான் இன்று ஒன்பது ரூபாய் நோட்டு என்று சிந்தித்தானே. அந்த கதை எழுதும்போதே பத்து ரூபாய் நோட்டு இருக்கு, அம்பது ரூபாய் நோட்டு இருக்குது, அதுல பாதி கள்ள நோட்டு இருக்குது, அதுவேற விசயம். ஆனால் ஒன்பது ரூபாய் நோட்டுன்னு சிந்திச்சாரு பாருங்க, இந்த சிந்தனை இப்படி மாறுபாடாய் ஒரு விசயத்தை அழுத்தமாய் ஆரவாரமில்லாமல் அதிரடியாய் இல்லாமல் மிகைப்படுத்தாமல், அதே நேரத்தில் புதுமையாய், நவீனமாய், எவனால் எது சொல்ல முடிந்தாலும், அது சாங்கிய தத்துவ அடிப்படையில் சொல்லப்படுவது என்று பொருள். அது படிக்காமலேயே நம் தமிழர்களுக்கு பழக்கமான ஒரு கலை. இது நம்முடைய தத்துவ மரபு. நீ அதை படிக்காமலே சிலசமயம் நாம் யோசிப்போம்.

வீட்டுல கிராமத்துல எல்லாம் பேசுவாங்க, “”நான் நினைச்சன்டா, நீ வந்துட்ட”ன்னுவாங்க என்ன அர்த்தம். சில சமயம் நினைக்காமலேயே நினைச்சன்னு புருடா உடுவாங்க. அது வேற விசயம். “”நான் நினைச்சன்டா நீ வந்துட்ட”ன்னு அதான் சாங்கியம். எண்ணத்தில் அதை வைத்திருக்கிறான் என்று அர்த்தம். கனவுல கூட வந்துருக்குதுப்பா அந்த விசயம் என்பான். பல சமயம் தோணுதுப்பான்னுவான். என்னா அர்த்தம், அதைப் பற்றி இவன் சிந்தித்திருக்கிறான். அது அவனுக்கு தோன்றியிருக்கிறது என்று அர்த்தம். சிந்தனையை ஒழுங்குபடுத்தும் தத்துவ மரபு நமக்குரியது. சாங்கியம் நமக்குரியது. ஆனால் சிந்திக்காமலே சொல்லுவதை ஏற்றுக் கொள் என்று அடம்பிடிக்கும் இந்து மரபு. அது, இந்திய மரபு அல்ல, அல்ல, அல்லவே அல்ல என்பது தான் என்னுடைய கருதுகோள்.

அது இந்து மரபில் நீ சிந்திக்கவே கூடாது. இல்லன்னா, பி.ஏ. பிலாசபி படிச்சிருக்கிற ஒரு ஆளு, தத்துவம் படிச்சிக்கிட்டிருக்கிற ஒரு ஆளு நேரா ஒரு சாமியார்கிட்ட போனானாம். அந்த சாமியார் முன்னால போயி கடவுள நீ பார்த்திருக்கியா? காட்டுன்னானாம். அந்தாளு ஒரு அறை விட்டானாம். இவனுக்கு உடனே வலிச்சுதாம். வலிச்ச உடனே புரிஞ்சிக்கிட்டாராம். ஓ இந்த வலிதான் கடவுள் என்று புரிந்து கொண்டாராம். அடுத்த கட்டம். இந்த சீன் நடந்தா இன்னா செய்வாங்க. எடுத்துகிட்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்திருப்பாங்க. வலிகடவுளா? அப்போ நல்லா கேட்க மாட்டேன் வாயில கோபம் வந்தா? என்னங்கடா இது வலி கடவுளு, நோவு கடவுளு, நமைச்சலு கடவுளு, அரிப்பு கடவுளு இந்தக் கடவுளை உணர்த்தியவர் இராமகிருஷ்ண பரம அம்சராம். உணர்ந்தவர் விவேகானந்தராம். ரெண்டு பேரையும் ஒரே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில ­மூணாம் நம்பர் பெட்டுல நாலாம் நம்பர் வார்டுல கட்டிப் போட வேண்டாம். இது என்னா மரபு இது? இதெல்லாமா கடவுளை உணர்த்தும். நம்மாளு கடவுள சிந்தித்து போடுபோடுன்னு போடறான் பாருங்க, அது சாங்கியம்.

மாணிக்கவாசகர் சொல்றாரு. தயவு செய்து கவனியுங்க. மாணிக்கவாசகர் கடவுள் எப்படி இருப்பாருன்னு யோசிக்கிறாரு. அவரு பார்த்த கடவுளை ஏத்துக்கல. நடராஜப் பெருமான் டேன்ஸ் ஆடறாரே அவருதான் கடவுள்னு ஒத்துக்கல. பக்கத்துல சக்தி பராசக்தி உமாதேவி இப்படி இப்படி பெரிய முலை வைச்சிகினு நின்னுகிற மாதிரி சிலை இருக்குதே அதப் பார்த்து கடவுளுன்னு ஒத்துக்கல, பக்கத்துல முருகர் வள்ளி தெய்வானையோட டபுள்ஸ் வைச்சிகினு கீறாரே அதப்பார்த்து கடவுள்னு ஒத்துக்கல. அவராகச் சிந்திக்கிறார். மாணிக்கவாசகர் அவராகச் சிந்திக்கிறார். அது சாங்கியம். சிந்தித்து, தான் சிந்தித்ததை வெளியே சொல்லுகிறார்.

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here