நேற்றைய பதிவின் தொடர்ச்சி

மீண்டும் நினைவுபடுத்துகிறேன். சாங்கியம், யோகம், மீமாம்சம், வேதாந்தம், அதற்கு முன்னால் ஞாயம், வைசேஷிகம் இவ்வளவுதான். ஜைனம் இருக்கிறது. பௌத்தம் இருக்கிறது. இதுல வேதாந்தம் கூட உபநிடதத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர, வேதங்களையோ, ஆரண்யகங்களையோ அடிப்படையாகக் கொண்டது இல்லை. மதிமாறன் அவர்கள் ஒரு பத்திரிக்கையிலே, தலித்முரசு பத்திரிக்கையிலே, ஒரு நீண்ட கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார். “பாரதிய ஜனதா பார்ட்டி’ன்னு பாரதியை விமர்சித்து எழுதினார். அதுக்கு கோவை ஞானி அவர்கள், நான் மதிக்கிற தலைவர்களிலும், அன்பர்களிலும், நண்பர்களிலும் ஒருவர், அதற்கு விமர்சனம் எழுதும்பொழுது இப்ப ஒரு புத்தகத்துக்கு என் நண்பர் பாரதி புத்திரன் எழுதிய புத்தகத்தில எழுதும்போது சொல்லியிருக்கிறாரு, “”இப்பொழுது திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் தமிழ் உணர்வு, தமிழ் தேசிய உணர்வு கொண்டவர்களும், தவறான பின்புலத்திலிருக்கிறார்கள். இவர்கள் வேதத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. வேதத்தில் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவில்லை” என எழுதி இருக்கிறார்கள். நல்லவேளை அவரு என்னை சொல்லியிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.

ஏன்னா வேதத்தில் என்ன இருக்கிறதுன்னு தெரிந்தவன் உங்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். நான்கு வேதங்கள் என்று சொல்கிறார்கள். அதிலே ரிக் வேதம், யசூர் வேதம், அதர்வண வேதம், சாமவேதம் என்று நான்கு இருக்கிறது. இந்த ரிக் வேதத்திலேதான் மீன் குழம்பு வச்ச மாதிரி, இந்த நரிக்குறவர்கள் சாப்பாட்டை பிரிச்சு வச்ச மாதிரி, அதில் மீன் குழம்பும் இருக்கும், கருவாட்டுக் குழம்பும் இருக்கும், சாம்பாரும் இருக்கும், சுத்தமா, சைவமா வெண்டக்கா குழம்பும் இருக்கும், எல்லாம் கலந்து இருக்கும். ரிக் வேதத்திலே அப்படித்தான் இருக்கிறது. ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பே இல்ல. சில விசயம் ரொம்ப அறிவு பூர்வமா இருக்குது. சில விசயம் முட்டாள்தனத்துக்கு மகுடம் சூட்டின மாதிரி இருக்குது. எங்கேயிருந்துடா இந்தக் கலப்படச் சோறு வந்ததுன்னு பார்த்தா ரிக் வேதத்துல எங்கெல்லாம் கொஞ்சம் அறிவுப் பூர்வமா சொல்லியிருக்குதோ, அதுக்கெல்லாம் கீழே எழுதியிருக்கிறான் திராவிட ரிக்குன்னு. அது எல்லாம் திராவிட ரிக்கு, தென்னாட்டுல இருந்தவன் ஏதாவது சிந்தித்து சொன்னா அந்த சிந்தனையை, சிந்தினதை எடுத்துக்கிட்டு போயி சேர்த்து வைத்துக் கொண்டு, திராவிட ரிக்குன்னு சொல்லிக்கிட்டிருக்கிறானுங்க. அதுதான் ரிக் வேதத்துல இருக்கறது. இன்னொரு வேதம் இருக்கிறதே யசூர் வேதம், அது என்னா சொல்லுது? நம்ப பேட்டையிலே சில பேர் பேசிக்குவாங்க, மாப்ள என்ன ரொம்ப ராங் பண்றான். நா, அந்தப் பக்கமா போனா எனுக்கு ரொம்ப பயமா இருக்குது. நீ மட்டும் ஊம்னு சொல்லு, அவன கீசிர்றன். இத அப்படியே மொழி பெயர்த்தீங்கன்னா, அதுதான் யசூர் வேதம். மாப்ள எனக்கு பயமா இருக்குது, அந்தப் பக்கமா போனா உதைப்பான் போலருக்குது, நீ மட்டும் ஊம்னு சொல்லு நீ மட்டும் எனக்கு சப்போட் பண்ணு நான் அவங்கள கீசிர்றன். இத ட்ரான்ஸ்லேட் பண்ணினா அது யசூர் வேதம்.

மூ­ன்றாவது இருக்கிறதே அது சாம வேதம். அதிலேதான் தெளிவு பெற்ற சில விசயம், மன்னிக்க வேண்டும், ரிக்வேதம், யசூர் வேதம், அதர்வண வேதம் அதில் பாதி சடங்குகள் கற்பூரத்தை எப்படி கொளுத்துறதுன்னு சடங்கு இருக்கிறதுன்னு வச்சிக்குங்க, நல்லா கவனிங்க கற்பூரம் கண்டுபிடிக்கப்பட்டு 1218 வருசம்தான் ஆவுது. கற்பூரம் 1218 வருசத்துக்கு முன்னால கண்டுபிடிக்கப்பட வில்லை என்பது உலக வரலாறு, ஆனால் கற்பூரத்தை எப்படி கொளுத்தறதுன்னு, எப்படி தீபாராதனை காட்டணும்னு ஐயாயிரம் வருடத்துக்கு முன்னால எழுதி வச்சிருக்கான்னு சொன்னா கேட்கறவன் கேனையா இருந்தா, எருமமாடு ஏரோப்பிளேனு ஓட்டும்னு சொல்லுவான்! 1218 வருசத்துக்கு முன்னால இல்லாத கற்பூரத்தை எப்படி காட்டுறதுன்னு அதுக்கு முன்னால எப்படி சொல்ல முடியும். அப்ப இதையும், அதையும் எல்லாம் சேர்த்துக்கணும், இன்னொரு பெரிய வேடிக்கை 2,200 வருசத்துக்குமுன்னால வந்த புத்தர், அவரைப்பற்றிய செய்தியெல்லாம் கூட 5000ம் வருசத்துக்கு முன்னாலேயே வந்துவிட்டது, யசூர் வேதத்துல. அது எப்படியிருக்கும்? இதுல இருந்து தெரியவில்லையா உங்களுக்கு. திருட்டு பசங்க மாத்தி மாத்தி கெடச்சதெல்லாம் சேர்த்து வச்சுட்டு அதையும் பிரிண்ட் பண்ணாம வச்சிக்கினு, இது எழுதாக் கிளவி, இது சும்மா செவி வழியில் பாரம்பரியமா படித்துக் கொண்டு வருவதுன்னு பிலிம் காட்டிக்கினு இருந்தானுங்க. இப்ப அதை பிரிண்ட் பண்ணி பார்த்தா! அதுல தப்பு தப்பா இருக்குது. கடைசியாக சாம வேதம் ஒன்று இருக்கிறது.

அருமைத் தோழர்களே! தோழியர்களே! அது என்னான்னு டிரான்ஸ்லேட் பண்ணி உங்களுக்கு சொல்றேன், ஒரு பொம்பளய 10 ஆம்பிளைங்க தனி அறையில் பலாத்காரம் எப்படி பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்கனும்னா சாம வேதத்தை படிச்சா தெரிஞ்சுக்கலாம். டீடெய்லா இருக்குது அதுல. பின்னால் வாத்சாயனர் காம சூத்திரம் எழுதறதுக்கு அடியெடுத்து கொடுத்ததுதான் சாம வேதத்தின் பல பகுதி. இப்ப அத என்னான்னு பேசிக்கிட்டு இருக்கறாங்கன்னா, இப்ப இருக்கறாரே சங்கராச்சாரியார், இவரு எவளோ ஒரு நேபாளக்காரி கூட ஓடிப் போயி, திரும்பி ஓடி வந்தவரு. ஓடாமலேயே பரலோகம் போயி சேர்ந்தாரு இதுக்கு முன்னால் இருந்த பெரிய சங்காரச்சாரியார். அவரு சொல்லியிருக்கிறாரு, சாம வேதம் கலை ஞானம் உடையதுன்னு!

எது… ஒரு பொம்பளைய பத்து ஆம்பிளைங்க எப்படி பலாத்காரம் பண்றதுன்னு டீடெய்லா ஸ்டடி குடுத்திருக்கிறானே, அது கலை ஞானம் உடையதாம். இப்படி சினிமா படம் எடுக்கிறவங்களும், டி.வி தொடர் எடுக்கறவங்களும் இதே காட்சியை காட்டினா முகம் சுளித்தால் எதனாவது அர்த்தமிருக்குதா? அவர்கள் சாமவேதம் படித்தவர்கள். அவர்கள் சாம வேதத்தின் படி படமெடுக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையா? தயவு செய்து யோசிங்க. இந்த வேதங்கள் நான்கும் நாசமா போவுதுன்னா, அப்போ, வேதத்திலே எங்களுக்கு கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? அந்தக் கேள்வியை நான் எழுப்புகிறேன். தமிழர்களுக்கு, தெலுங்கர்களுக்கு, மலையாளிகளுக்கு, குஜராத்திகளுக்கு பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு சாம வேதத்தில் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை. அதர்வண வேத்தின் சடங்குகள் எங்களுக்கு தேவைப்படவில்லை. ரிக் வேதத்தின் சில பகுதிகளை தவிர, இயற்கை வர்ணணைகளைத் தவிர அதுவும் திராவிட ரிக் தவிர அவர்கள் தந்த ரிக்கிலே ஒரு மசுரும் இல்லை என்பது புரிந்து போய் விட்டது.

அதர்வண வேதத்தில், ஒன்றுமில்லை, ரிக்வேதத்தில் ஒன்றுமில்லை, யசூரிலே ஒன்றுமில்லை, சாம வேதம் வெறும் காமக் களஞ்சியம் என்று ஆன பின்னால், இதை சும்மா நான் கூட்டத்தில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், இங்கே கூட, எந்தப் பார்ப்பன பண்டிதர்களிருந்தாலும், அவர்கள் பெயரை வச்சுக்குவான் சிலபேரு, நான் சாம வேதம் படித்தவன், அதனால் சாமவேதி. நான் யசூர் வேதம் படித்தவன் யசூர் வேதி, நான் சீதபேதி! அப்படின்னு அவன் பேரு வச்சுக்குவான். எவனா இருந்தாலும், யாரா இருந்தாலும், பணிவோடு சவாலுக்கு அழைக்கிறேன். இதே போல ஒரு கூட்டத்தைக் கூட்டி வியாக்கியானம் செய்வதற்கும், விவாதம் செய்வதற்கும், நான் தயார். நான் சொல்வதை தவிர வேதத்தில் ஒரு மசுரும் இல்லை. யார் கூப்பிட்டாலும் நான் வருவதற்குத் தயார். இந்த வேதங்கள் இப்படியென்றால், அதற்குப் பிறகு இவர்களுக்கு ஆரண்யகங்கள் என்று இருக்கிறது. அசபர்ணர், அசக பர்ணர், யார்னா தெரிதா உங்களுக்கு அசக பர்ணர், அவர் நம்ம சித்தப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் ஒண்ணுவிட்ட தம்பிபுள்ள மாதிரியா இருக்குது. அந்த அசக பர்ணர், அசக மர்ணர், பிருகஸ்பதி, நாராயணர், வெங்காயத்தார், வெள்ளபூண்டார்னு பத்து பேர் சேர்ந்து ஆரண்யகங்கள்ல ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இந்த பிரபஞ்சம் எதிலேயிருந்து தோன்றியது?!

தொடரும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here