நூல் அறிமுகம்:

சதிகள் பலவிதம், ஏகாதிபத்திய முதலாளித்துவம் காலனிய நாடுகளின் அதிகாரத்தை கைப்பற்ற நடத்தும் சதி ஒரு வகை!
ஏகாதிபத்தியத்தை முறியடிக்க உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டும் பாட்டாளி வர்க்க கட்சியை செங்கொடியை ஏந்தியபடியே செங்கொடிக்கு எதிராக வேலை செய்யும் சதிகள் பல!
தலைமையை கைப்பற்ற சதி! அதை முறியடிக்க எதிர் சதி! தலைமைக்குத் தெரியாமல் கும்பல் செய்யும் சதி! இவற்றை திட்டமிட்டு உருவாக்கும் ஏகாதிபத்தியங்களின் சதி என்று சதிகளின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
பாட்டாளி வர்க்க கட்சியை எகுறுதி கொண்ட கட்சியாக மாற்றுவதற்கு முன்னின்று செயல்பட்ட தோழர் .ஸ்டாலின் மீது பரப்பப்படும் பல்வேறு அவதூறுகளை முறியடிக்க அற்புதமான ஆயுதமாக இந்த நூல் நமக்கு கிடைத்துள்ளது!

ப்பப்பா! எத்தனை வகை பொய் பிரச்சாரங்கள்!!

முன்னாள் சோசலிச நாடுகள் அப்பட்டமான முதலாளித்துவ நாடு களாகி பிளவுபட்டுப் போனதால், குதூகலத்தில் இருக்கும் ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களது அடிவருடிகளும் செய்கின்ற பித்தலாட்டப் பிரச் சாரங்கள் தான் எத்தனை வகை!

கம்யூனிசம் மனிதனின் சிந்தனையைச் சிறைப்படுத்துகிறது; மனி தனை நாசப் படுகுழியில் தள்ளுகிறது; ஸ்டாலின் மகா கொடுங்கோலன்; கம்யூனிசம் மரணப் படுக்கையில் வீழ்ந்து விட்டது; முதலாளித்துவமே மனித குலத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்பது நிரூபணமாகி விட்டது – இவையே இந்தப் பிரச்சாரங்களின் கருப்பொருளாகும்.

ஆனால், பேராசையும் கொலைத் தாகமும் போர் வெறியும் பாசி சமும் மனித வாழ்வைச் சூறையாடுவதும், சிந்தனையை சிறை வைக்க அல்ல, சீழ் பிடிக்க வைப்பதும் ஏகாதிபத்தியங்கள்தான்; தனியுடமை சித்தாந்தம்தான். சோசலிசம்தான் மனிதனின் சிந்தனை ஆற்றலையும் உழைப்புத் திறனையும் பன்மடங்கு கட்டவிழ்த்து விடுகிறது; மார்க்சியம் – லெனினியமே அதன் இயங்கு சக்தி என்ற உண்மைகளை இவ்வரிய நூல் தெளிவாக நிரூபிக்கின்றது.

உலகத்திற்கு சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் போதிக்கிற அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் இளம் சோசலிச சோவியத் ஒன்றியத்தை ஒழித்துக் கட்ட என்னென்ன அக்கிரமங்களிலும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன என்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்திக் காட்டுகிறது, கிடைத்தற்கரிய இச்சிறிய நூல்.

ஒரு அயோக்கியனின் அகராதியில் உள்ள அனைத்து நடவடிக்கை களிலும் ஏகாதிபத்திய சதிகாரர்கள் ஈடுபட்டனர்.

பத்திரிக்கையாளர், செஞ்சிலுவை சங்கத்தினர் என்ற முகாந்திரங்க களில் ஒற்றர்களை சோவியத் நாட்டுக்குள் அனுப்பினார்கள். தூதரகங்கள் சதிக்கூடங்களாக மாற்றப்பட்டன. கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே ஐந்தாம் படைகளை உருவாக்கினார்கள். வதந்திகளைப் பரப்பிவிட்டு உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டினார்கள். பணத்தையும் பதவியையும் காட்டி கூலிப்படைகளை அமைத்து யுத்த பூமியாக்கினர். கலப்படம், கள்ளக்கடத்தல், பதுக்கல். போலி நோட்டுகளை புழங்க விடுதல் முதலானவற்றை ஊட்டி வளர்த்தார்கள். திடீர் திடீர் என்று சீர்குலைவு களைத் திட்டமிட்டுச் செய்தார்கள். பத்திரிகைகளிலும் வானொலியிலும் பச்சைப் பொய்களை உண்மைக் கதைகளாக உலவ விட்டனர்.

தங்களது பேராசை வெறியையும் ஆக்கிரமிப்பையும், திரை மறைவுச் சதிகளையும் கபட நாடகங்களையும் நியாயப்படுத்த ஏகாதிபத்திய சதிகாரர்கள் அள்ளித் தெளித்த அவதூறுப் பிரச்சாரங்கள் ஏராளம்!

இரும்புத் திரை நாடு! தீயவர்களின் சாம்ராஜ்யம்! பஞ்சத்தையும் பசியையும் மட்டுமே கம்யூனிசம் வழங்குகிறது! லெனின் ஒரு ஜெர்மன் ஏஜெண்டு! சர்வாதிகாரி! மக்கள் மிருகங்களைப் போல பக்குவப்படுத்தப்படுகிறார்கள்! உலகத்திற்கே நாசத்தை விளைவிக்கும் சக்திகள்! இப்படி அடுக்கடுக்கான அவதூறுப் பிரச்சாரங்கள் ஏராளம்! ஏராளம்!!

இத்தனையும் உக்ரைனின் கோதுமை வயல்களையும் சைபீரியாவின் எண்ணெய் வளங்களையும் குறி வைத்துதான்!

ஆனால், இளம் சோசலிச சோவியத் அரசோ, ஏகாதிபத்தியங்கள் ஏவிவிட்ட இந்த ஏவுகணைகளையெல்லாம் தூள் தூளாக்கியது.

ஒன்றா, இரண்டா? பதினான்கு வல்லரசுகள் ஒன்று சேர்ந்து படை யெடுத்து வந்தன. ஏற்கெனவே நான்காண்டுகளாய் யுத்தத்தில் ஈடுப்பட்டு களைத்துப் போன ஒரு நாடு, பஞ்சத்தாலும் பசியாலும் வாடி வதங்கிய மக்களைக் கொண்ட ஒரு நாடு, தொழிற்சாலை, நிலங்கள் ஆகிய உற்பத்திச் சாதனங்கள் எல்லாம் ஏகாதிபத்திய யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட ஒரு நாடு பாய்ந்து வந்த ஓநாய்களின் பகடுகளை உடைத்து நொறுக்கியது.

இத்தனை இடர்ப்பாடுகளுக்குமிடையே ஐந்தாண்டு திட்டங்களில் இலக்கிற்கும் மேலாக தொழிலாளர்களும் விவசாயிகளும் உற்பத்தி செய்தார்கள். நாட்டுக்காக உற்சாகமாக உழைப்பில் ஈடுபட்டார்கள்.

டிராட்ஸ்கியவாதிகள், புகாரின்கள் போன்ற ஏகாதிபத்திய உள்நாட்டு ஏஜெண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள்.

இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதிபத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்தத்திற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள்.

கிரெம்லினைக் கைப்பற்றுவேன்’ என்ற கனவோடு, விரைந்த வெற்றி எனும் எதிர்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின்வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக் கொடி நாட்டியது செஞ்சேனை!

ஆம்! பின்தங்கிய ஒரு விவசாய நாட்டின் பாமர மக்கள்தான், ஐரோப்பா கண்டத்திலேயே பொறுமைக்குப் பேர்போன நாட்டின் மக்கள்தான், இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்கள்.

இந்தச் சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது?

கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷ்விக் கட்சித் தலைமையும், லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின் அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததனால் உருவானதுதான் அச்சக்தி!

“ஏகாதிபத்தியங்கள் காகிதப் புலிகளே!” “மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள்” என்ற மாபெரும் வரலாற்று உண்மைகள் இங்கே நிரூபிக்கப்பட்டன. உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வூட்டி விட்டால் வல்லரசுகளும் அவர்களுக்கு ஒரு தூசு – என்பது மெய்ப்பிக்கப்பட்டது.

உளவாளிகளும், கட்சிக்குள் ஒளிந்து இருந்த ஏஜெண்டுகளும் குட்டி முதலாளித்துவ ஊசலாட்டக்காரர்களும் ஈவு இரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். அதனால்தான், உலக சோசலிச இயக்கத்தின் தளப் பிர தேசம் பாதுகாக்கப்பட்டது; அதனால்தான் உலகெங்கிலும் புரட்சிக் கனல் மூட்டப்பட்டது; ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சரியான அடி கொடுக்கப்பட்டது.

ஏகாதிபத்திய ஏஜெண்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலா ளித்துவப் பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடு பிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால், அதற்காக நாம் பெருமைப்படுவோம்!

ஸ்டாலின் எப்பேர்ப்பட்ட மாமனிதர் என்பதை இந்நூலைப் படித்தவர்கள் நிச்சயம் உணருவார்கள். ஏனென்றால் ஏகாதிபத்தியத்தின் மாபெரும் சதியை முறியடித்து, இளம் சோசலிச நாட்டை பாதுகாத்து, இளைஞனாக வளர்த்தது அவரது தலைமையலவா?

மைக்கேல் சேயர்ஸ், அல்பர்ட் இ.கான் என்ற இரு அமெரிக்கர்கள் எழுதிய “மாபெரும் சதி” எனும் இந்நூல் ஒரு மர்ம நாவல் போல விறு விறுப்பாக செல்கிறது. ஆனால் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்கள் அனைத்தும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவையே.

சோசலிசத்தைக் கட்டியமைப்பது எப்படிப்பட்ட கடுமையான பணி என்பதையும் அதற்குப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கறாராக கையாள்வது அவசியம் என்பதையும் புரிந்து கொள்ள இந்த நூல் நிச்சயம் உதவும்.

நன்றி,

ஆசிரியர் குழு.
புதிய ஜனநாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here